கடலூர், ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது வன்மத்தையும் மக்களவை மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற் கொண்ட தூய்மை பணியாளர் தேசிய வாரிய ஆணையத்தின் உறுப்பின ருக்கு கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- அண்மையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய உறுப்பினர் மா.வெங்கடேசன் ட்விட்டர் பதிவு ஒன்றை செய்திருந்தார். பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் விஸ்வநாதன் கட்டாயப் படுத்தியதால் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த (பாபு என்ற) ஒரு தூய்மை பணியாளர், அரிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பின்னர் மரண மடைந்தார் என்றும், இக்குற்றத்துக் காக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் ஆகியோருக்கு பரிந்துரை செய் திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுடன் சேர்த்து பாபு சாக்கடைக்குள் இறங்கி பணி செய்யும் வீடியோ ஒன்றையும் இணைத் திருந்தார். பெண்ணாடம் பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. அதன் 12வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் (சிபிஎம்). முதலில் வெங்கடேசன் பதிவு செய்த வீடியோ, விஸ்வநாதன் வார்டு சம்பந்தப் பட்டதல்ல. அடுத்தது, அவர் பதிவிட்டி ருந்த செய்தியின் உண்மை தன்மைக்கு வருவோம். 13.5.23 அன்று விஸ்வநாதன் வார்டில் பாபு, மேலும் இருவரும் திறந்த சாக்கடை ஒன்றை சுத்தம் செய்யும் பணி செய்துள்ளனர். அப்போதும் கூட பாபு சாக்கடையில் இறங்கவில்லை. எனவே கவுன்சிலர் கட்டாயப்படுத்தினார் என்கிற பிரச்சனைக்கு இடமில்லை.
அதன் பிறகு, 19.5.23 வரை 6 நாட்கள் வெவ்வேறு வார்டுகளில் பாபு சாக்கடை சுத்தம் செய்யும் பணி செய்துள்ளார். (இதற்கான ஆவணங் ்கள் உள்ளன). 19.5.23 மாலை பாபு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளூர் மருத்து வமனைக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் மயங்கி விழுந்ததால், பெரம்ப லூர் தனலட்சுமி, சீனிவாசன் மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளனர். பிறகு, திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு 24.5.23 அன்று காலமானார். காவேரி மருத்துவமனையின் இறப்பு அறிக்கை, மூளை வீக்கத்துக் காக அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி பாபு மாரடைப்பால் மரண மடைந்தார் என்று குறிப்பிடுகிறது. அதாவது, கவுன்சிலருக்கும் இந்த மரணத்துக்கும் தொடர்பில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மரணத்தின் காரணம் அதிகாரப் பூர்வமாக வெளிவராத அன்றைய சூழலில், அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், பாபுவின் தாயாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து இழப்பீடாக ரூ.3 லட்சம் அளித்துள்ளார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு அரசு அளித்தது போல் ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்க சார்பில் ஆட்சியருக்கு கடிதம் அளிக்கப்பட் டுள்ளது. இதற்கிடையே, பாபுவின் மனைவி தீபா, காவல் துறைக்கு அளித்த புகாரில், தேதி, சம்பவங்கள், இறப்பின் காரணம் உட்பட உண்மைக்கு புறம்பாக பல செய்தி களை எழுதியுள்ளது வருந்தத்தக்கது. கவுன்சிலரை குற்றவாளியாக்கும் நோக்கத்தோடு தவறான விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. கணவரை இழந்து வாடும் தீபாவின் துன்பத்தை பகிரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. அதே நேரத்தில், சிபிஎம் மீதான காழ்ப்புணர்ச்சியோடு, அவரது துயரத்தை பயன்படுத்தி, தூண்டி விட்டு, தவறாக புகார் கொடுக்க வைத்ததில், உள்ளாட்சி தேர்தலில் விஸ்வநாதனுடன் போட்டியிட்டு தோற்ற பாஜக வேட்பாளருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்க வேண்டி யிருக்கிறது.
ஒரு ஏழையின் உயிரை வணிக பொருளாக்குவது பற்றியெல்லாம் பாஜகவுக்கு கவலையில்லை. அடுத்தது, எவ்வித ஆதாரமும் இல்லா மல், சிபிஎம் மீது ஆணைய உறுப்பினர் அவசர அவசரமாக ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? மேலும் அவரது பதிவின் பின்னூட்டத்தில், மதுரை சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் மீது வசைமாரி பொழிகிறார். எனவே ஆணைய உறுப்பினரின் நோக்கம் சு.வெங்கடேசனையும், சிபிஎம் கட்சியையும் அவதூறு செய்வது தான், அதற்காக ஆணையத்தின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்து கிறார் என்ற முடிவுக்கு தான் வர வேண்டியுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் நிலைமை துயரமாகவே தொடர்கி றது. அதனை மேம்படுத்த சிபிஎம் விடாமல் போராடி வருகிறது. வரும் காலத்திலும் இப்பணி தொடரும். கடலூர் மாவட்டத்தில் மட்டுமல்லா மல் தமிழ்நாடு முழுவதும் நடந்த மலக்குழி மரணங்களில் தலையிட்டு போராடி நீதி பெற்று கொடுத்துள்ளது. உண்மை இப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவர் என்பதால் சிபிஎம் எம்.பி. கண்ணை யும் வாயையும் மூடிக் கொண்டிருக் கிறார் என ஆணைய உறுப்பினர் பதிவிடுவது பொய் என்பது மட்டு மல்ல, விஷமத்தனமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. தீண்டாமை உள்ளிட்ட சமூக கொடுமைகளை சமரசம் இன்றி எதிர்த்து வரும் எங்கள் இயக்கத் திற்கு திட்டமிட்டு அவப்பெயர் ஏற்படுத்துவதையும், அடுத்து வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, சிபிஎம் எம்.பி.யை அவதூறு செய்வதையும் வன்மை யாகக் கண்டிக்கிறோம். ஆணைய உறுப்பினர் தனது தவறான பதிவை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யின் கடலூர் மாவட்டக் குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.