சென்னை,அக்.9- திமுக தலைவராக இரண்டா வது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஞாயிறன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், முறைப்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவில் அடிப்படை உறுப்பி னர், கிளைக்கழக செயலாளர், இளைஞர் அணி செயலாளர், பொரு ளாளர் என பல்வேறு பொறுப்பு களில் திறம்பட பணியாற்றி திமுக வின் தலைவராக உயர்ந்தவர். அதே போல் சட்டமன்ற உறுப் பினராக, சென்னை மாநகராட்சி மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி தமிழக முத லமைச்சரானவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழகத்தில் மதவெறியை எதிர்த்து, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்கு தலைமை யேற்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்த லிலும் பாஜகவை வீழ்த்தியவர். இன்றைக்கும் மாநில உரிமை களை பாதுகாப்பது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மின்சார திருத்த சட்ட எதிர்ப்பு என்று ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தை பாது காக்க முனைப்பாக செயலாற்று வதோடு, ஒன்றிய பாஜக அர சின் வகுப்புவாத நடவடிக்கை களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் தமிழக முதலமை ச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாநில உரிமைகளை பறிக்க முற்படும் பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய திமுகவின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், பொரு ளாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திமுக நாடாளு மன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.