states

ஐ.டி.ஐ. நிறுவனங்களை சீர்குலைப்பதா?

சென்னை,பிப்.11- ஐடிஐ நிறுவனங்களை சீர் குலைக்கும் ஒன்றிய பாஜக அர சின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக கட்சியின்  மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:   நாடு முழுவதும் 5500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்  ஐடிஐ நிறுவனங்கள் செயல்பட்டு  வருகின்றன. 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியுற்ற கிராமப்புற, நகர்ப்புற மேற்படிப்பு படிக்க வாய்ப்பில்லாத 25 லட் சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் ஆண்டுதோறும் இந்நிறுவனங்களில் பயிற்சி பெற்று திறமை வாய்ந்த தொழி லாளர்களாக உருவாகி வருகிறார்  கள். இவ்வாறு பயிற்சி பெறு வோர்கள் தொழில் முனைவோர் களாக, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கு செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணி புரிந்து நாட்டின் தொழில் வளர்ச்  சிக்கும், இந்தியாவின் பொருளா தாரத்திற்கும் முதுகெலும்பாக திகழ்ந்து வருகின்றனர்.

தொழில்நுட்ப அறிவும் நிபுணத்துவமும் இல்லாமலாக்க...

இந்நிலையில் ஐடிஐ-யின்  தரத்தை சீர்குலைக்கும் நோக் கோடு புதிய தொழிற்கல்விக் கொள்  கையினை புகுத்தி, கணினி வழித் தேர்வு, கணிதம் மற்றும்  வரைபடம் பாடத் திட்டம் மற்றும்  பயிற்சி நேரம் குறைப்பு, பொறி யியல் சார்ந்த அத்தியாவசிய பாடத் திட்டங்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை ஒன்  றிய பாஜக அரசு மேற்கொண்டுள் ளது. இதனால் ஐ.டி.ஐ. படித்து செல்லும் இளைஞர்கள் எந்தவித தொழில்நுட்ப அறிவும், நிபுணத்து வமும் இல்லாமல் வெறும் சொல்  வதைச் செய்யும் கூலித் தொழி லாளியாக (Bond Labour) பணி புரியும் வகையில் மாற்றப்பட்டுள் ளனர். ஒன்றிய அரசின் இத்த கைய நடவடிக்கைகள் இளை ஞர்களுக்கும், தொழிலாளர் களுக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டில் இயங்கும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர், ரூ. 3200 கோடி ஒதுக்கீடு செய்து அதற்  கான பணிகள் நடைபெற்று வரு கின்றன. ஆனால் ஒன்றிய அரசு  ஐ.டி.ஐ. நிறுவனங்களை முற்றிலு மாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கை யில் இறங்கியுள்ளது. இது வன் மையான கண்டனத்திற்குரியது.

திரும்பப் பெறவேண்டும்

எனவே, ஒன்றிய அரசு தொழிற்  கல்வியில் புகுத்தியுள்ள புதிய  தொழிற்கல்வி முறையை முற்றிலு மாக கைவிட வேண்டுமெனவும், கணிதம் மற்றும் வரைபடம், பாடத் திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைத்ததையும், தேசிய திறன்  தகுதி குறைத்ததையும் உடனடி யாக திரும்பப் பெற்று பழைய நிலையிலேயே பாடத்திட்டங்கள் தொடர வேண்டுமெனவும், என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. மேலும், தொழிற்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு  உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமெனவும், தமிழ்  நாட்டில் ஐ.டி.ஐ. நிறுவனங்களில் பணியாற்றும் தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியா ளர்கள் அனைவரையும் பணிநிரந் தரம் செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர் கூறியுள்ளார்.