states

போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, ஜூலை 19 - சட்டவிரோதமாக செயல்படும் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்களை பணிய மர்த்துவதை கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது. இதன்மீது முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நிர்வாகம் பணித்தன்மையில் மாற்றம் செய்யக்கூடாது (ஸ்டேட்டஸ் கோ) என்று தொழிலாளர் சிறப்பு தனித்துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதனையும் மீறி நிர்வாகங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்து வருகிறது. இந்த நிலையில் 6வது சுற்று சமரச பேச்சுவார்த்தை செவ்வாயன்று (ஜூலை 18) சிறப்பு தனித்துணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களின் பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். ஆனால், நிர்வாகத்தில் முடிவெடுக் கும் நிலையில் உள்ள கழக அதிகாரிகள் பங்கேற்க வில்லை. இதனையடுத்து தொழிலாளர் ஆணையர் அதுல் மிஸ்ராவிடம் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் அளித்துள்ள புகாரில், “ஸ்டேட்டஸ்கோ-வை மீறியது தொ டர்பாக நிர்வாகங்கள் மீது ஏற்கெனவே 31 புகார்கள் அளிக் கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தை அமல்படுத்த மறுப்பது தொடர்பாக பிரிவு 29ன் கீழும் புகார் செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் உரிய அதிகாரிகள் பங்கேற்பதில்லை. அரசுத்துறை அப்பட்டமாக சட்ட மீறலில் ஈடுபடுவது டன், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.  இது தொழில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையா கும். எனவே, நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.