புதுதில்லி, ஏப்.11- நரேந்திர மோடி அரசு இரண்டா வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் கிறிஸ்தவ மத நம்பிக்கையா ளர் கள் வழிபாட்டுத் தலங்கள் மீது கடு மையான தாக்குதல் நடத்தி வருகின்ற னர். உ.பி., மத்தியப்பிரதேசம், கர்நாடகா, அரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநி லங்களில் அதிகளவில் தாக்கு தல்கள் நடந்துள்ளன. தேவாலயங் களை எரிப்பது முதல் கிறிஸ்தவர் களை வலுக் கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றுவது வரை வன்முறைகள் நடந்துள்ளன. தேசிய சிறுபான்மை ஆணை யத் தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட தாக்கு தல்கள் நடைபெறுகின்றன. யுனை டெட் கிறிஸ்டியன் ஃபோரம் கருத்துப் படி, 2022இல் 598 தாக்குதல்கள் நடந்துள்ளன. 89 போதகர்களும் பாதிரி யார்களும் தாக்கப்பட்டனர். 68 மசூதிகள் அழிக்கப்பட்டன. 127 தாக்குதல்களில் 82 திட்டமிடப்பட்ட கலவரங்களை ஒத்தவை. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன் னிட்டு 2020 மற்றும் 2021 இல் மொத்தம் 104 தாக்குதல்கள் நடந்துள்ளன. சத்தீஸ்கரில் உள்ள நாரண்பூருக்கு ஆயுதம் ஏந்திய நூற்றுக்கணக்கா னோர் வந்து தேவாலயத்தை தாக்கி னர். குற்றம் சாட்டப் பட்டவர்களில் பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்களையே வேட்டையாடுதல்
2021 அக்டோபர் 10 அன்று, மவ் மாவட்டத்தில் பிரார்த்தனை செய்யும் போது இந்து வாஹினி, பஜ்ரங்தள் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர், மதமாற்றம் செய்ததாக போத கர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 2021 அக்டோபர் 12 அன்று, உ.பி.யில் இரண்டு கன்னியாஸ்திரிகள் தாக்கப் பட்டனர். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கியில், அக்டோபர் 3ஆம் தேதி, மசூதியில் தொழுகைக்கு வந்த வர்களை 200 குண்டர்கள் கும்பல் தாக்குதல் நடத்தினர். கும்பல் தாக்குதல்களை தவிர்க்க, பிரார்த்தனைக் கூட்டங்களை தவிர்க்குமாறு கிறிஸ்தவர்களுக்கு கர்நாடக காவல்துறை அறிவுறுத்தி யுள்ளது. 2021 நவம்பர் 21 அன்று, பெலகாவியில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பான சமஸ்த் கிறிஸ்டி சமாஜ் தெரிவித்துள்ளது. மகாராஷ் டிராவில் கிறிஸ்தவ சமூகம் பரவ லான தாக்குதல்களை சந்தித்து வருவ தாகவும், இதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரி யுள்ளது. தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்று (ஏப்.12) மும்பை யில் பேரணி நடத்தப்படும் என சமாஜ் செய்தி தொடர்பாளர் டால்பி டிசோசா அறிவித்துள்ளார். நாங்கள் மிகவும் அமைதியான சமூகம். ஆனால் இப்போது நாங்கள் பகிரங்கமாக போராட்டம் நடத்த வேண்டிய கட்டா யத்தில் உள்ளோம்,’ என்றார். மத சிறுபான்மையினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோதமாக இடிக்கப் பட்ட தேவாலயங்களை மீண்டும் கட்ட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.