states

தமிழ்நாடு - ‘சொல் அல்ல தமிழரின் உயிர்’

சென்னை,ஜூலை 18- தமிழ்நாடு நாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- பரந்து விரிந்த இந்தியத் துணைக் கண்டத்திற்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1956 நவம்பர் 1 அன்று மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக் குத் தமிழ்நாடு என்ற பெயர்  பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டி யதாயிற்று! 1967-ல் இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சியான திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதலமைச்சரானார். 1967 ஜூலை 18-ல் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினோம்! மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோம சுந்தர பாரதியார், சங்கர லிங்கனார், சிலம்புச் செல்வர்  ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது.இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித் துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுவதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! இவ்வாறு முதல்வர் கூறி யுள்ளார்.