சென்னை, ஜூன் 15- நீட் தேர்வு முடிவுகள் வெளியா னதையடுத்து நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புக் கான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணை யம் திட்டமிட்டுள்ளது. நான்கரை ஆண்டுகள் கால இளங்கலை மருத்துவ படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய நடை முறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது. அதன்படி மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்தே ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களுக்குள் மறு தேர்வு எழுதும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.