states

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு தமிழ்நாடு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்

சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு  சிபிஎஸ்இ பதில் மதுரை, மே 7- 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய  தமிழ்நாடு  சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கூடுதல் மதிப்  பெண் வழங்கப்படும் என்று சு.வெங்க டேசன் எம்.பி.யின் கடிதத்திற்கு சிபிஎஸ்இ பதில் அளித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:  தமிழ்நாடு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு இயற்பியல் & உயிரியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் கடுமை யாக இருந்தன; ஆகவே  மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுத்தாள் திருத்தம் அமைய வேண்டும்; இப்படி குறிப்பிட்ட மாநில/ மண்டல மாணவர்கள் கேள்வித்தாள்  கனத்தால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று 2023 மார்ச் 20 அன்று கடிதம்  எழுதி இருந்தேன்.  

அதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ் எழு திய 25.03.2023 தேதியிட்ட பதில் (CBSE/CE/ PPS/2023) பொத்தாம் பொதுவாக ‘‘செ யலூக்கம் உள்ள உள் கட்டமைப்பு’’ (Robust internal system) எங்கள் வசம் இருக்கிறது; இது பாட நிபுணர்களின் (Subject experts) கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்கக் கூடியது” என்று கூறியிருந்தார். குறிப்பிட்ட பிரச்சனை  உங்கள் கவனத்திற்கு வந்ததா? மாண வர்களின் குறை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வெவ்வேறு பகுதி களுக்கு வெவ்வேறு கனத்தில் கேள்வித்தாள்  இருப்பது சரியா?  என்று மீண்டும் 19.04.2023 அன்று கடிதம் எழுதினேன்.  சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணை யர் டாக்டர் சன்யாம் பரத்வாஜிடம் இருந்து  மீண்டும் பதில் (CBSE/CE/PPS/2023 /24.04.2023) வந்துள்ளது.  “தேர்வுத்தாள் திருத்தம் நடந்து கொண்டு இருப்பதாகவும், திருத்தம் முடிந்து தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக  மாணவர்களின் மதிப்பெண் விவரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித் துள்ளார்.  தமிழ்நாடு மாணவர்களுக்கு உரிய நியா யம் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.