states

எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட பின்னர் ஆசம் கான் குற்றமற்றவர் என தீர்ப்பு!

லக்னோ, மே 25- 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்  கப்பட்டு, எம்எல்ஏ பதவியும் பறிக்கப்  பட்டு விட்ட நிலையில், சமாஜ்வாதி  கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானை குற்றவாளி இல்லை என்று ராம்பூர் நீதிமன்றம் தற்போது விடு தலை செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலை வராக அறியப்படுபவர் ஆசம் கான். மக்கள் செல்வாக்கு படைத்தவர். ராம்  பூர் சட்டமன்றத் தொகுதியில் 10 முறை வெற்றிபெற்றவர்.  இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு  நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது மிலாக் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர்  மோடி குறித்தும் அப்போதைய உத்த ரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்தும், அரசியல்  ரீதியாக விமர்சனங்களை வைத்தி ருந்தார். குறிப்பாக, இந்தியாவில்  இஸ்லாமியர்கள் வாழ முடியாத சூழலை பிரதமர் மோடி உருவாக்கிக்  கொண்டு இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையொட்டி, பிரதமர் மோடி குறித்து ஆசம் கான் அவதூறு பரப்பு வதாகவும், இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்ட முயற்  சிப்பதாகவும் குற்றம் சாட்டிய பாஜக வினர், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ராம்பூர்  நீதிமன்றம், ஆசம் கானை குற்றவாளி  என்று அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை  மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் நிபந்தனை அடிப்ப டையில் ஜாமீனும் வழங்கி உத்தர விட்டது. எனினும், ஆசம் கானின் எம்எல்ஏ பதவி பறிபோனது. ஆசம் கானின் தொகுதியில் இடைத்தேர்தல்  நடைபெற்ற நிலையில், அதில் பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆசம் கான் வழக்கு தொடர்பாக மேல் முறையீடு  செய்யப்பட்டு அதே ராம்பூர் நீதிமன் றத்தில் விசாரணை நடைபெற்று வந்  தது. இதில், அவதூறு வழக்கில் ஆசம் கான் குற்றமற்றவர் என்று தீர்ப்ப ளிக்கப்பட்டு உள்ளது. அண்மையில், காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்திக்கும், இதேபோல கிரிமினல் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்  கப்பட்டு, எம்.பி. பதவி பறிக்கப்பட் டது. அவரும் மேல்முறையீடு செய் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.