states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டின் பிரபல இணையவழி கல்வி நிறுவனமான பைஜூ’ஸ் (Byju’s) நிறுவனம், 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்தா ண்டு 2500 ஊழியர்களை பைஜூ’ஸ் நிறுவனம் நீக்கியது. இதே போல அமெரிக்காவை தலை மையிடமாகக் கொண்ட பிரபல முதலீட்டு நிறு வனமான ஜே.பி.மோர் கன் நிறுவனம் தனது நிறுவனத்தின் முக்கிய மான 20 முதலீட்டு பிரிவு வேலைகளை குறைக்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா மைய ஊழல் வழக்கு தொடர்பாக சிவ சேனா (உத்தவ்) இளைஞ ரணி தலைவர் ஆதித்யா வின் உதவியாளர் சூரஜ் சவான், சிவசேனா (உத்தவ்) மூத்த தலை வர் சஞ்சய் ராவத்தின் உதவியாளர் சுஜித் பட்கர் ஆகியோரின் வீடுகள், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோத னை நடத்தியது.

2021-இல் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வரிச்சி யூர் செல்வத்தை கைது செய்தது விருதுநகர் மாவட்ட காவல்துறை.

உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலவிய நெருக்கடி காரணமாக ஈரானுக்கு இடம் பெயர்ந்திருந்த 2 ஆயிரத்து 500 அகதிகள் சொந்த நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் திரும்பி வந்ததாக ஆப்கானிஸ்தானின் அகதிகளுக்கான துறை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதேபோன்று, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்திருந்த 476 பேரும் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரைத் தீர்ப்பது பற்றி  அரபு லீக்கின் பொதுச் செயலாளர் அகமது அபோல் கெய்ட்  சூடானின் இறையாண்மைக் கவுன்சிலின் துணைத்தலைவர் மாலிக் அகர் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தற்போதைய நிலவரம் பற்றி மாலிக் அகர் எடுத்துரைத்தார். களத்தில் உள்ள நிலைமை மற்றும் அதனால் மக்கள் சந்திக்கும் சவால்கள் ஆகிய வற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இருவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பிரேசிலின் யனோமாமி பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கப்  பணிகள் நடைபெற்று வந்தன. இத்தகைய பணிகளால் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலில் கேடுகள் விளைந்ததால் பழங்குடி மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. வலதுசாரி ஆட்சியின் போது அவர்களின் எதிர்ப்புகள் கண்டுகொள்ளப்படவில்லை. இடது சாரி அணியின் லூலா ஜனாதிபதியாக வந்தபிறகு, அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அந்தப்பகுதி “சட்டவிரோத சுரங்கப்பணிகள் இல்லாத” பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.