states

ஓய்வூதியத்தை திருத்தம் செய்ய மறுக்கும் மோடி அரசு

சென்னை,நவ.11- தொலைத் தொடர்புத்துறை ஊழியர்களுக்கு 01.01.2017 முதல் வழங்க வேண்டிய திருத்தப்பட்ட ஓய் வூதியத்தை வழங்க மறுக்கும்  ஒன்றிய அரசை கண்டித்து செவ்வா யன்று (நவ.12) தலைநகர் புதுதில்லியில் பிஎஸ்என்எல்- எம்டி என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. ஒன்றிய அரசின் அநீதிக்கு எதிராக 4 லட்சம் பிஎஸ்என்எல் எம்டி என்எல் ஓய்வூதியதாரர்களின் கோபத்தையும் வேதனையையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த  போராட்டத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  8 ஓய்வூதிய அமைப்புகளை உள்ளடக்கிய பிஎஸ்என்எல் எம்டி என்எல் ஓய்வூதியர் சங்கங்களின்  சம்மேளனம் சார்பில் புது தில்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்கிழமை (நவ. 12) காலை 10 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரை இந்த போரா ட்டம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக் கணக்கான மூத்த குடிமக்கள் கலந்து கொள்கின்றனர். பிஎஸ்என்எல் உருவானபோது, அப்போதைய வாஜ்பாய் தலைமை யிலான ஒன்றிய அரசு, தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொலை தொடர்பு சேவைத் துறையின் முன் னாள் ஊழியர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் அரசு ஓய்வூதி யத்தை உறுதி செய்தது. அதன்படி,  பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு வரு கிறது. கெடுவாய்ப்பாக தற்போதுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் ஊழியர்களின் ஊதியத் திருத்தத் திற்குப் பிறகுதான் ஓய்வூதியத் திருத்தம் சாத்தியம் என்ற நிலைப் பாட்டை எடுத்துள்ளது. இதனால் 3வது ஊதிய மறுசீரமைப்பு ஆணை யம் செயல்படுத்தப்படவில்லை. பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் ஓய்வூதி யதாரர்களின் ஓய்வூதியப் பலன் களின் முழுப் பொறுப்பையும் ஒன்றிய அரசே ஏற்க வேண்டும் என்ப தால், ஓய்வூதியத் திருத்தத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற உண்மையை அரசாங்கம் வசதியாக மறந்துவிடுகிறது.  ஒன்றிய அரசின் ஓய்வூதிய தாரர்கள், 7வது மத்திய ஊதியக் குழு  பரிந்துரைகளின்படி, 01-01-2016 முதல் ஓய்வூதியத் திருத்தத்தைப் பெற்றுள்ளனர். இந்த எட்டு ஆண்டு களில், ஆயிரக்கணக்கான பிஎஸ் என்எல் - எம்டிஎன்எல் ஓய்வுபெற்ற வர்கள், ஓய்வூதியத் திருத்தத்திற் கான நியாயமான உரிமையைக்கூட  பெறாமல் இறந்துவிட்டனர் என்பது வேதனையானது என்று கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.