சென்னை,ஜன.25- தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகை யில் வியாழனன்று(ஜன.26) நடை பெறும் தேநீர் விருந்தை புறக்கணிப் பதாக திமுக தோழமை கட்சிகள் அறி வித்துள்ளன. நாடு முழுவதும் குடியரசு தின விழா ஜன.26 அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடி யை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொள்கிறார். இதை யடுத்து, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அர சியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளி கையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடு ப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்வில்லை என்று தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் மதவெறி கும் பலிடமிருந்து பாதுகாத்திட ஜனவரி 26 அன்று “இந்திய அரசியல் அமைப் புச்சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு” தினமாக எங்கள் கட்சியின் தேசியக் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை யொட்டி ஆளுநர் மாளிகை தேநீர் விருந் திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடு த்துள்ளார். “தமிழ்நாடு ஆளுநர்” என்று அழைப் பிதழில் குறிப்பிட்டிருந்தாலும், அவர் தன் அரசியல் அமைப்புச் சட்ட கடமை களை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப் பப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மசோ தாக்கள் ஆளுநரால் கிடப்பில் போடப் பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அவர் ஆர்எஸ்எஸ் சார்பு கருத்துக்களையே பேசி வருகின்றார். எனவே, அவர் அழைப்பு விடுத் துள்ள தேநீர் விருந்தை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு புறக்கணிக்கின்றது” என்று தெரி வித்திருக்கிறார். இதேபோல், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சி கள் அனைத்தும் ஆளுநர் மாளிகை யில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக் கணிப்பதாக அறிவித்துள்ளன. அதேநேரத்தில், ஆளும் கட்சி என்ற முறையில் முதலமைச்சர், அமைச்சர் கள் மட்டும் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.