திருவண்ணாமலை, நவ.17- தமிழகத்தில் திமுக அரசை சீர்குலைக்க, ஆளுநரை பாஜக பயன்படுத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார். கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடை பெற்றது. இதையொட்டி நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது, இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது போல் தோற்றமளித்தாலும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா ராஜ்ஜியத்தை செயல்படுத்தும் அரசாகவே அது உள்ளது. ஆர்எஸ்எஸ் விரும்பும் இந்துத்துவ ராஜ்ஜியம் அமைப்ப தற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தங்கு தடையற்ற சுரண்டலுக்கும் உதவும் வகை யில் பாசிச பாஜக அரசு செயல்பட்டு வரு கிறது. தமிழகத்தில் காவல்துறை, உளவுத் துறை உதவியுடன் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு விதங்களில், சூழ்ச்சி, தந்திரங் களில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக அரசை சீர்குலைக்க ஆளுநரை பாஜகவும் ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக வினரின் உதவியுடன் பாஜக உறுப்பினர்கள் நான்கு பேர் உள்ளனர். கேரளாவில் பாஜக ஆர்எஸ்எஸ் வன்முறைகளை எதிர்த்து மகத்தான போராட்டம் நடைபெற்று வரு கிறது. இந்தப் போராட்டம் தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கண்ணூரில் பாஜக நடத்திய வன்முறை வெறி யாட்டத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட தோழர்கள் பலியாகி உள்ளனர். கேரளாவில் கடந்த தேர்தலில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் துடைத்து எறியப்பட்டது. ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு கடன்களை வாரி வழங்குகிறது.இதனால் 11 லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கிகள் திவால் ஆகிறது. திவாலான வங்கிகளை, அந்த வங்கிகளில் கடன் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களே விலைக்கு வாங்கும் அவலம் நடைபெற்று வருகிறது. ஆர் எஸ் எஸ், பாஜக ஆட்சியை அகற்ற ஒன்றிணைந்து இந்திய மக்கள் போராட வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார். பிரகாஷ்காரத் ஆங்கில உரையை மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
கே.பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், மோடி தலைமையிலான பாஜக அரசு, அம்பானி, அதானிக்கு பல ஆயிரம் கோடி வரி தள்ளுபடி செய்துவிட்டு, 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர் களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்தைப் பாதுகாக்க வலுவான இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் என்றார். பாஜக ஆட்சியில் இந்து மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மத மோதல் களை ஏற்படுத்துவதுடன், குற்றவாளிகளை சேர்க்கும் கூடாரமாக பாஜகவின் செயல்பாடு உள்ளதாகக் குற்றம்சாட்டினார். வேலையில்லா கொடுமையால் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவிப்பது டன், தொழில்கள் பாதிக்கப்பட்டு, இருக்கின்ற வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள் ளது. பாஜகவுடன் கூட்டணி சேர பல மாநி லங்களில், பல்வேறு கட்சிகள் தயக்கம் காட்டும் நிலையில், தமிழகத்தில் அதிமுக வினர் மட்டும் பாஜகவுடன் இணைந்து செயல்படுவது தமிழக மக்களுக்கு இழை க்கும் துரோகம் என்றார். தமிழகத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இரட்டைக் குதிரை யில் பாஜக சவாரி செய்ய முயன்றாலும் 2019 தேர்தலை விட மிகப்பெரிய தோல்வி வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும் என்பது உறுதி என்றார்.
ஆளுநரை நீக்குக!
மாநில மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு, ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளு நர் ரவியை நீக்க வேண்டும் என, முதன் முத லாக குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தான் என்றார். தமிழகத்தில் திமுக செயல் படுத்தி உள்ள நல்ல திட்டங்களை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில், நிதி நெருக்கடி மற்றும் ஒன்றிய அரசின் நிதி போதுமான அளவில் கிடைக்காததால், மின்சாரம், பால் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏற்றம் செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. மாற்று வழியைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டுமென, தமிழக அரசை வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எட்டு வழிச்சாலைத் திட்டம்
எட்டு வழிச் சாலை திட்டத்தை அதிமுக அரசு அறிவித்தபோது, திருவண்ணா மலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடும் பயணம் நடத்தி, அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினோம். மேலும், தமிழகம் முழுவதும் மக்கள் நலனுக்காக அத்தகைய நெடும் பயணங்கள் தொடரும். மனித ஒற்றுமைக்கு எதிராக எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்பாடுகளைத் துவங்குகிறதோ, அங்கெல்லாம் சென்று அதை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் என்றும் அவர் குறிப் பிட்டார். மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று சேர்த்து, மோடி அரசைத் தூக்கி எறியும் வகையில் திமுக வுடன் இணைந்து மகத்தான இயக்கங்கள் நடை பெற்று உள்ளது. அந்த திசை வழியில் இந்த கூட்டணி பயணிக்கும் என்றும் அவர் தெரி வித்தார்.
காரி உமிழும் போராட்டம்
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில், குஜராத் மாநிலத்தில் பாலம் அறுந்து விழுந்ததில், மோடியின் மானமும் அறுந்து விழுந்துள்ளது. குஜராத் வாக்குப்பதிவு காரணத்திற்காகவே, நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் நடத்தப்படாமல் உள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ரவி ஆர் எஸ் எஸ்ன் ரப்பர் ஸ்டாம்ப் ஆகச் செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தின் பல்வேறு கலாச்சார ஒற்றுமை, மாண்பு பற்றி எல்லாம் அறியாமல், திராவிட மரபு என்பதே இல்லை எனவும், ஜி.யு .போப் திருக்குறளைத் திருத்தி மொழிபெயர்த்து விட்டார் எனவும், இந்த தேசம் ரிஷிகளால் ஆனது எனவும் வாய்க்கு வந்தபடி பேசித் திரிகிறார். “பாதகம் செய்பவரைக் கண்டால், அவர் முகத் தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என பாரதி சொன்னது போல், திருக்குறள், திராவிட மரபு, அரசியல் மாண்புகள் குறித்து ஆளுநர் ரவி தவறாகப் பேசி னால், ஆளுநர் மாளிகை முன்பு காரி உமிழும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் 90 விழுக்காடு இந்தி மயமாக்கப்பட்டுள்ளது, இந்தி தெரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்றத்தில் இந்தியில் பேச வேண்டும் என்று வரையறை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அர சின் கட்டமைப்பில் இந்தி கட்டாய மொழியாக வும், கல்வி, போட்டித் தேர்வு போன்றவற்றிலும் இந்தி கட்டாயம் என, தென்னிந்தியாவை புறக்க ணிக்கும் பாஜக, ஆர் எஸ் எஸ் இயக்கங்களை நாட்டைவிட்டு அகற்ற வேண்டும் என்றார் அவர். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் எம்.பிரகலநாதன் நன்றி கூறினார்.