சீனாவுடன் தொடர்பு டைய 138 சூதாட்ட செய லிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.
மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப் படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ் நாடு மண்பாண்ட தொழி லாளர் சங்கத்தினர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற கொலீஜி யம் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அனுப்பிய பரிந்துரைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலமாக, உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் மோர்பியில் நடைபெற்ற தொங்கு பால விபத்து தொடர்பாக கைதான வர்களில் 7 பேரின் ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றம் நிராகரித்தது.
பாதுகாப்பு, பொருளா தாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவதென இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமி ரேட் தீர்மானித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 டாலராக உள்ளது.
ரயில்வே துறையை தனி யார்மயமாக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை என்று அத்துறைக்கான அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலக்கரி உற் பத்தி 12.94 சதவீதம் அதி கரித்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரி வித்துள்ளது.
நாடு முழுவதும் உயர்நீதி மன்றங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரி வித்தார்.
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் வடமேற்கில் 120 கி.மீ. தொலைவில் அருகே ஞாயிறன்று காலை 8.12 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.
செவ்வாய் மற்றும் சந்திர னுக்கு வீரர்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை மார்ச் மாதத்தில் விண் ணில் செலுத்த திட்ட மிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. 12.5கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.334 அதிகரித்து ரூ.4,743க்கு விற்கப்படுகிறது.