states

img

சித்திரைத் திருவிழாவின் அடையாளங்கள்!

மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழ கர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு கள்ளழகரை வரவேற்க மதுரையில் இன்று லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். மூங்கில் கூடையால் செய்யப்பட்ட தலைப்பாகை கிரீடம் மற்றும் தண்ணீர்  பீச்சுவதற்கு ஆட்டுத் தோலினால் ஆன தோப்பறைகள் போன்றவை இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. இந்த தலை கிரீடம் செய்து விற்பனை செய்யும் வியாபாரி கண்ணன், கூடை  தயாரிக்கும் முறை குறித்து  கூறுகை யில், “இந்த சிறப்புக் கூடை செய்வதற்கு கேரள மாநிலம் பம்பையில் இருந்து மூங்கில்கள் கொண்டு வரப்படும். இதில் உறுதியான கூடை நெய்வதற்கு ஈத்தா மூங்கில் போன்றவைகளை வாங்கி  பயன்படுத்தி வருகிறோம். ஒரு கட்டு மூங்கில் ரூ.2 ஆயிரம்  முதல் ரூ. 3  ஆயிரம் வரை இருக்கும். இதில் 8 முதல் 9 கூடைகள் வரை பின்ன முடியும். ஒரு  கூடை ரூ.150 வரை விற்பனை செய்யப் படுகிறது. அதே போல் ஈத்தா மூங்கி லில் செய்யப்படும் தலைக்கூடை 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை  வரும் விற்கப்படும். அந்த மூங்கில் விலை கட்டு என்பது ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை இருக்கும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் சாதாரண மூங்கில் கூடை என்பது வெறும் பட்டு துண்டு சுற்றி ஒரே ஒரு கிளி மட்டும் வைக்கப் படும். ஈத்தா மூங்கில் என்பது 40 கிலோ எடை வரை  அதில் வைக்கப்படும்.  சித்திரை திருவிழா முடியும் வரை தான் இந்த தொழில் செய்வோம் அதற்குப் பின் வெங்காயம் விற்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகிறோம் என்று கூறினார். ஆட்டு தோல் பை வியாபாரி காரியா பட்டியைச் சேர்ந்த சின்னான் கூறுகை யில், “இந்த ஆட்டு தோல் பை வியா பாரம் என்பது 20 நாட்களுக்கு நடை பெறும். ஒரு தோலின்  விலை 300 முதல் 900 வரை வரும். இதற்கான தையல் கூலி என்பது 50 முதல் 100 ரூபாய் வரை வாங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தண்ணீர் பீச்சி அடிக்க தோப்பறை பயன்படும். இந்த தோப்பறை விருதுநகர் மாவட்டம் காரி யாபட்டியில் காலம் காலமாக தயாரிக்கப் பட்டு வருகின்றது. இத்தோல் பைகள்  தொழில் சித்திரை  மாதம் மட்டும் விற்பனை நடைபெறும். மற்ற காலங்களில்  கொத்தனார் வேலை, விவசாய கூலி வேலை, செருப்பு தைக்கும் வேலை பார்க்கச் செல்வோம். தை மாதம் பை தயாரிப்பதற்கான பணிகளை தொடங்கி விடுவோம். இதன் பெயர்  “தோப்பறைகள்” என்று அழைக்கப்படும். தோல் பைகளை கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் பயன்படுத்துவார்கள்.  உரிக்கப்பட்ட ஆட்டுத்தோல், சுண்ணாம்பு, ஆவாரம்பூ, கடுக்காய் இவற்றைக்கொண்டு பதப்படுத்தி தயாரிக்கப்படும் தோப்பறைகளை எட்டு தலைமுறைகளாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தயாரித்து வரு கின்றோம்.

சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது அவரை குளிர்விக்கப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீச்சி அடிக்கும் தோப்பறைகளைப் பயன்படு த்துவர். ஆட்டு தோலை திண்டுக்கல், புதுக்கோட்டை, செம்பட்டி பகுதிகளில் இருக்கக்கூடிய சந்தைகளிலிருந்து வாங்கி சுண்ணாம்புத் தொட்டியில் பத்து நாள்கள் ஊறவைத்து அதன் பின்பு அதில் இருக்கக்கூடிய முடியை அகற்றி ஆவாரங்குலையில் போட்டு கருவப்பட்டை தொட்டியில் 20 நாள்கள் ஊறவைத்து காலை மாலை என மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து வேலையைச் செய்தால்தான் ஒரு பை தயாரிக்க முடியும். தயாரிக்கப்படும் தோல் பைகள் அதன் அளவு மற்றும் வடிவத்திற்கு ஏற்ப விலை வைத்து சந்தையில் விற்பனை செய்யப்படு கின்றன. அழகர் ஆற்றில் இறங்கிய பின்பு பக்தர்கள் இப்பைகளை வைகை ஆற்றிலேயே விட்டுச் சென்று விடுவார்கள். திருவிழா காலங்களில் 10,000  முதல் 15,000 வரை தயாரிக்கப்படுவ தால் போதிய தண்ணீர் வசதி மற்றும் தேவையான தொட்டிகள் இல்லாததால் பைகள் தயாரிப்பதில் சிரமம் ஏற்படு கிறது. சந்தைகளிலிருந்து ஆட்டுத்தோ ல்களை வாங்கி வரும்போது துர்நாற் றம் அடிக்கும் எனக்கூறி பேருந்தில் ஏற்ற மறுப்பதால் தனியாக வாடகை வண்டி எடுப்பதில் நிறையப் பணம் செல வாகிறது. இதனால் வருடம் தோறும் தோப்பறைகளின் விலைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலை மேலும் இப்படியே தொடர்ந்தால் அடுத்தடுத்த சித்திரைத் திருவிழாக்களில் தோப்பறைகளின் பங்களிப்பு குறைந்துகொண்டே வரும்” என வேதனையுடன் கூறினார்.

ஜெ. பொன்மாறன்