states

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!

அகமதாபாத், ஜன. 31 - பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வந்தவர்  ஆசாராம் பாபு. இவருக்கு ஏராளமான பக்தர்கள் சேர்ந்ததை அடுத்து, அவர் மேலும் பல இடங்களில் ஆசிரமங்களை அமைத்தார்.  அவ்வாறு அமைக்கப்பட்ட ராஜஸ்தான் ஆசிரமம் ஒன்றில், 2013-ஆம்  ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடு மை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசாராம் பாபு, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசாராம் பாபு-வால் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்த வழக்கை விசாரித்த காந்தி  நகர் செசன்ஸ் நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக வும், அவரை குற்றவாளி என்றும் திங்கட் கிழமையன்று அறிவித்தது. இதை யடுத்து, இந்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி டி.கே. சோனி செவ்வாயன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கடந்த 9 ஆண்டு களாக சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கில் ஆஜராகி வந்த ஆசாராம் பாபு, இன்றும் அதே முறையில் ஆஜரானார். தீர்ப்பை அடுத்து, அவர் தொடர்ந்து ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசாராம் பாபுவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தங்கையை, ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச் சாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு அவ ருக்கு சூரத் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.