states

கேடியு துணை வேந்தர் நியமனம்: கேரள ஆளுநருக்கு பின்னடைவு

கொச்சி, நவ.12- தொழில்நுட்ப பல்கலைக்கழ கத்தின் (கேடியு) தற்காலிக துணை வேந்தர் நியமனத்திலும் கேரள ஆளு நர் பின்னடைவைச் சந்தித்தார். டாக்டர். சிச தாமஸ் துணைவேந்த ராக நியமிக்கப்பட்டது முதன்மை யான சட்டப் பிரச்சனை என்றும் அது புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நிலைநிற்கத்தக்கது என்றும் நீதிம;d wம் தெரிவித்தது. ஆளுநரின் நியமன உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்  பட்டது. சிச தாமஸின் தகுதி குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவும் நீதி பதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவிட்  டார். இந்த வழக்கு வெள்ளியன்று (நவ.11) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநரின் பதில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட வில்லை. இதற்கு ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கோரினார். யுஜிசியும் பதில் அளிக்க அவகாசம் கேட்டது.  பல்கலைக்கழகத்தின் செயல் பாடு சீராக இயங்க வேண்டும் என் றும், மாணவர்களின் எதிர்காலம் முக்  கியம் என்றும் நீதிமன்றம் நினை வூட்டியது. எதிர் தரப்புகள் அனைத்  தும் புதன்கிழமைக்குள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய உத்த ரவிடப்பட்டது.

மனு மீதான விசா ரணை அடுத்துவரும் வெள்ளியன்று நடைபெறும். அரசுதான் துணைவேந்தரை பரிந்துரைக்க வேண்டும், ஆனால் டாக்டர். சிச-வை ஆளுநர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிய மித்துள்ளார் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கேடியு சட்டத்தின்  படி, துணைவேந்தர் பதவி காலி யாக இருந்தால், அந்த பொறுப்பு  வேறு ஏதேனும் துணைவேந்தர் அல்  லது கேடியு புரோ விசி அல்லது உயர்கல்வி செயலாளருக்கு மாற் றப்பட வேண்டும். அதற்குப் பதிலாக தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூத்த இணை இயக்குநரை நியமித் தது சட்டவிரோதம் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.  அரசால் பரிந்துரைக்கப்பட்ட வர்களின் தகுதிகள் குறித்து விசா ரித்த நீதிமன்றம், இது தொடர்பான விவரங்களை ஒப்படைக்குமாறு கூறியது. பல்கலைக்கழக விதி முறைகள் யுஜிசி வழிகாட்டுதலுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.