states

பின்தங்கியோருக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்

புதுதில்லி, நவ.26- நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவி களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையின் ஒன்றிய அரசின் பங்கு  50 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகித மாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால்  கேரளாவில் மட்டும் 1.25 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படும். பள்ளி அளவில் 9,10 ஆம் வகுப்பு களுக்கு உதவித்தொகை வழங்கினால் போதுமானது என்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வித் துறையில் ஓபிசி பிரிவினருக்கான முழு உதவித்தொகைக்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள் ளது.

2022 முதல் 2026 வரை நடைமுறை யில் இருக்கும் இளம் சாதனை யாளர் உதவித்தொகை (PM-- Yashassi) விருது திட்டத்தின் பெயரில் இந்த வழி காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2.5 லட்சத்திற்கும் குறைவான வரு மான வரம்பு கொண்ட இதர பிற்படுத்தப் பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் நாடோடி கள்-DNT (Denotified, Nomadic and Semi-Nomadic Tribes) பிரிவைச்  சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.1500  ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது.  இனி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாண வர்கள் மட்டுமே இந்த கல்வி உதவி யைப் பெறுவார்கள். லட்சக்கணக்கான மாணவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. உயர் கல்விக்கு முந்தைய உதவித்தொகையில், 100 சதவிகிதம் ஒன்றிய அரசின் பங்காக இருந்து வந்தது. இப்போது 60 சதவிகித தொகையை ஒன்றிய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும்  ஏற்க வேண்டும். இதன் மூலம் கேர ளத்தில் வழங்கப்படும் ரூ.24 கோடியில் ரூ.16.4 கோடி கேரள அரசின் கரு வூலத்திற்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல் களின்படி, உயர்ந்த கல்வித் தரம் உள்ள  நிறுவனங்களில் படிக்கும் மாண வர்கள் மட்டுமே உயர்நிலைக்கு முந்தைய (போஸ்ட் மெட்ரிக்) உத வித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதி யுடையவர்கள். எந்தவொரு சந்தர்ப்ப த்திலும், ஒரு நிறுவனத்தில் அனுமதிக்க ப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, ஒதுக்கப்பட்ட உதவித்தொகைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், நுழைவுத் தேர்வில் சிறந்த  மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப் படும். கேரளாவைப் பொறுத்தவரை, இதன் காரணமாக உயர் பட்டப்படிப்பு களைத் தொடரும் பல மாணவர்கள் உதவித்தொகையின் வரம்பிற்கு வெளியே இருப்பார்கள். முந்தைய ஆண்டுகளைப் போல்  அல்லாமல், மாநில அரசின் கல்வி  உதவித்தொகைக்கு தகுதியான மாண வர்களுக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு செய்வதற்கு முன் இலவச  அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் வழிகாட்டு தல்கள் கூறுகின்றன. உதவித்தொகை விகிதங்களுக்கு நான்கு அடுக்குகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பட்டம் மற்றும் முதுநிலை தொழில்முறை படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்ச தொகை ரூ.20,000, டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளுக்கு ரூ.13,000, குரூப் I மற்றும் II இல் இல்லாத பட்டதாரி மற்றும் முதுகலை படிப்புகளுக்கு ரூ.8,000, பட்டப் படிப்புகள் அல்லாதவர் களுக்கு ரூ.5,000 வழங்கப்படும். இது தவிர ஏழை மாணவர்களுக்கான விடுதி வசதிகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது.