states

அண்ணாமலை பல்கலை தொலைதூர மாணவர் சேர்க்கை வழக்கு: யு.ஜி.சி பதிலளிக்க உத்தரவு

சென்னை, மே 11- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், 1979-80ஆம் கல்வியாண்டு முதல் தொலைதூர கல்வியை வழங்கி வருகிறது. இதுவரை 225 பாடங்களை 1.24 லட்சம் மாண வர்களுக்கு தொலைதூர கல்வி வழங்கி வருகிறது.  இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்  குழுவின் ஒப்புதல் இல்லாமல் தொலைதூர வகுப்புகளை நடத்தி வருவதாகவும், அதனால் மாணவர்கள் சேர வேண்டாம் என  வலியுறுத்தி, கடந்த மார்ச் 25ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு பொது அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் அண்ணா மலை பல்கலைக்கழகம் சார்பில் அதன் பதிவாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் 2014-15ஆம் கல்வியாண்டு முதல் அங்கீகாரம் பெறவில்லை என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும், ஆண்டுதோறும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த போதும்,

அதன் மீது எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள் ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,24,000 மாணவர் கள் தொலைதூர கல்வியில் சேரும் நிலையில்,  உண்மையை தெரிந்து கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட இந்த அறிவிப்பு நியாய மற்றது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்  விசாரணைக்கு வந்த போது, கடந்த காலங்களில் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருவதாகவும், நடப்பு கல்வி யாண்டில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு  கட்டுப்பட்டது என அண்ணாமலை பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை  பதிவு செய்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும் படி, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தார்.