states

காவல்துறையினருக்கு அண்ணா பதக்கம்

சென்னை,செப்.14- அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை,  விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையி லும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி  பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின்  அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்கு நர். முதல் நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை  அலுவலர். படைவீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5  ஊர்க்காவல் படையினர், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், தடய அறிவியல் துறை பிரிவில்  இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் என்று மொத்தம் 127 பேரின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக் கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்  வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்  பட்டுள்ளது.

;