states

தீக்கதிர் விரைவு செய்திகள்

6 நாட்களாக திணறும் பஞ்சாப் காவல்துறை  போக்கு காட்டும் அம்ரித்பால் சிங்

சண்டிகர், மார்ச் 23- பஞ்சாபை பிரித்து “காலிஸ் தான்” என்ற பெயரில் தனி நாடு என்ற கோரிக்கையை வைத்து கலகம் செய்து வரும் ‘வாரிஷ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையில் மாநில போலீசார், துணை ராணுவப்படையினர் மும் முரமாக உள்ளனர். ஞாயி றன்று அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் நெருங்கி யபோது அவர் இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றுவிட்டார். தப்பி சென்ற நாள் முதல் இன்று  வரை 5 நாட்கள் ஆகியும் அம்ரித்பால் சிங் இருக்கும் இடத்தை பஞ்சாப் காவல் துறையால் நெருங்க  முடிய வில்லை. 100-க்கும் மேற் பட்ட அவரது கூட்டாளிகளை மட்டுமே பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அம்ரித்பால் சிங்கிற்கு  அடைக்கலம் கொடுத்த தாக ஹரியானாவைச் சேர்ந்த பால்ஜித் கவுர் என்ற பெண்ணை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளது.  அம்ரித்பால் சிங் தற்போது வரை  இருசக்கர வாகனத்தின் மூலம் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தற்போது ஹரியானா மாநிலத்திற்கு சென்றுவிட்ட தாக கூறப்படுகிறது.

இசைத் துறையில் டிஜிட்டல் திருட்டைத் தடுத்திட சட்டம் திருத்தப்பட்டிருக்கிறதா?

பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, மார்ச் 23- இசைத்துறையில் டிஜிடல் திருட்டைத் தடுத்திட ஒன்றிய அரசு சட்டம் எதுவும் இயற்றிடவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதி லளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், இசைத்துறையில் டிஜிட்டல் திருட்டைத் தடுத்திட, ஒன்றிய அரசாங்கம், 2021ஆம் ஆண்டு சினிமா- ஆட்டோகிராபி (திருத்தச்) சட்டமுன்வடிவு என்ற பெயரில் ஏதேனும் சட்டமுன் வடிவைக் கொண்டுவர உத்தேசித்துள் ளதா என்றும், ஆம் எனில் அதன் விவ ரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கூறியதாவது: இசைத் துறையில் டிஜிடல் திருட்டைத் தடுத்திடுவது தொடர்பாக ஒன்றிய அர சாங்கத்தின்கீழ் தரவு எதுவும் மேற்கொள் ளப்படவில்லை. 2021ஆம் ஆண்டு சினிமா-ஆட்டோகிராபி (திருத்தச்) சட்ட முன்வடிவு என்ற பெயரில் எவ்வித மான சட்டமுன்வடிவையும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்திடவில்லை. எனி னும், 2019ஆம்  ஆண்டு சினிமாடோ கிராப் (திருத்தச்) சட்டமுன்வடிவின்கீழ் சினி மாவைத் திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கான சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் 2019 பிப்ரவரி 12 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ் வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.    (ந.நி.)

ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு சாலைப் பணியாளர் ஆதரவு

கரூர், மார்ச் 23- கரூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநிலச்  செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டி டத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலை வர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்  தார். மாநிலச் செயலாளர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத்  தலைவர் மு.செல்வராணி, மாவட்டத் தலை வர் எம்.சுப்பிரமணியன், கல்வித்துறை நிர்  வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செய லாளர் பொன்ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்ச் 24 அன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் மனிதச்சங்கிலி இயக்கத்திலும், மார்ச் 28 அன்று அரசு ஊழி யர் சங்கம் நடத்தும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் கலந்து கொள்வது,  ஏப்ரல் 7 அன்று சென்னையில் உள்ள இயக்கு நர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு  இயக்கம் நடத்துவது, சங்கத்தின் 8-ஆவது  மாநில மாநாடு செப்டம்பர் 2-ஆவது வாரத் தில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய விரைவில் சட்டம்: அமைச்சர்

புதுச்சேரி, மார்ச் 23- புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய விரை வில் சட்டம் கொண்டு வரப்படும்  என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவை யில் வியாழனன்று (மார்ச் 23)  ஆன்லைன் ரம்மி விளையாட்டுக் களை தடை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு  வந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா  பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.  ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டுக்களை தடை செய்யும் உத்த ரவை ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து சென்றால் மட்டுமே அந்த விளையாட்டுக்களை தடை செய்யும் நிலை உள்ளது என்றார். ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்கு தடை விதிப்பது சம்பந்த மாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் லட்சுமிநாராயணன், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை  விதிக்க சட்டம் கொண்டு வருவதில்  மாற்று கருத்து இல்லை. கடந்த 11.6.2022இல் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வர உள்ளது என்ற தகவல்  வெளியானபோதே சட்டத்துறை யிடம் விவாதம் நடத்தினோம். காவல்துறை, வருவாய்த் துறைக் கும் கருத்து கேட்டு அனுப்பி யுள்ளோம்.  தற்போது தடை சட்டம்  சட்டத்துறையின் வசம் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் பெற்று சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

வாணிஜெயராம் மறைவுக்கு இரங்கல்

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு சட்டப்பேரவை வியா ழனன்று (மார்ச் 23) காலை  கூடியது. மறைந்த முன்னாள்  உறுப்பினர்கள் த. மாரிமுத்து  (குளத்தூர்), ப.தங்கவேலு (ஜெயங் கொண்டம்), கு. சீனிவாசன் (மன்னார் குடி), முன்னாள் அமைச்சரும் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவருமான சி.நா.மீ. உபயதுல்லா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  வேலூர் மாவட்டத்தில் பிறந்து தனது இனிய குரல் இந்திய திரை உலகில் புகழின்  உச்சத்தை தொட்டவர் பிரபல பின்னணி  பாடகர் வாணி ஜெயராம். பல்வேறு மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக் கிறார். ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறார். பிப்ரவரி 4 அன்று  மறைவடைந்தார். அவரது மறை வுக்கும் சட்டப்பேரவையில் உறுப் பினர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

தினமலர் மீது  உரிமை மீறல்!

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (மார்ச் 23) நேர மில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் சபா.ராஜேந்திரன், காங். சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை, பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் அவை உரிமை மீறல் பிரச்சனை ஒன்றை கொண்டு வந்தனர். அப் போது, “மார்ச் 21 அன்று சட்டப்பேர வையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்துபோது உறுப்பினர்க ளின் இருக்கையில் வைக்கப்பட்டி ருந்து மடிக்கணினியை பார்த்துக் கொண்டிருந்ததை தூங்கியதாக ‘தினமலர்’ ஒரு படத்தை வெளியிட்டி ருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது. அவையின் உரிமையை மீறிய செயலாகும். எனவே, அவை உரிமைக்குழுவுக்கு அனுப்பி அந்த பத்திரிகை மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து, அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள்  சாலை மறியல்

சென்னை,மார்ச் 23- ராகுல் காந்திக்கு குஜராத் நீதி மன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை  விதித்ததை தொடர்ந்து நாடு முழு வதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென  அவையிலிருந்து வெளியேறினார்கள். தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதில், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், விஜயதாரணி உள்ளிட்ட வர்கள் நெற்றியில் கருப்பு துணி  அணிந்து சிறிது நேரம் மறியலில் ஈடு பட்டனர். ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

உலகச் செய்திகள்

வெப்பமயமாதல் பிரச்சனையால் ஜெர்மனியின் காடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் அறிவித்திருக்கிறது. 12ஆவது ஆண்டாக தொடர்ந்து கடும் வெப்பம் நிலவும் நிலையில், மிக அதிகமான வெப்பம் இருந்த ஆண்டாக 2018 ஆம் ஆண்டு இருந்தது.  அதே அளவுக்கு 2022 ஆம் ஆண்டும் இருந்ததாக அளவிடப்பட்டிருக் கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனியின் விவசா யத்துறை அமைச்சர் செம் ஓஸ்டெமிர், “காடு என்பது நோயாளியைப் போன்றது. அதற்கு நமது உதவி தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

லித்தியம் வளம் மீதான பொலிவியாவின் உரிமையை யாரும் தட்டிப் பறித்துவிட முடியாது என்று பொலிவியாவின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “மிகவும் தேவையான தொழில்நுட்ப மாற்றத்திற்கு இந்த உலோகம் மிகவும் முக்கியமானதாகும். மின்சாரத்தில் ஓடும் வண்டிகளுக்கான மின்கலன்களைத் தயாரிக்க லித்தியம் பயன்படுத்தப்படுகிறது” என்றார். அண்மையில், இரண்டு தொழிற்சாலைகளை அமைக்க சீன நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது

வரவிருக்கும் துருக்கி(துர்க்கியே) ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் அறிவித்துள் ளார். ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், மூன்றாவது முறையாக ஐந்தாண்டுகளுக்கு பதவி வகிக்க போட்டியில் இறங்கியிருக்கிறார்.  இதுவரையில் 18 பேர் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். வேட்பாளர் பதிவு மே 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் எக்ஸ்பிபி 1. 1.16 (XBB.1.16) வகை இந்தியாவில்  வேகமாக பரவி வருகிறது. மிக குறு கிய காலத்தில் 9 மாநி லங்களில் 349 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த 137 நாட் களில் இல்லாத அள வுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 1,100 தாண்டி யுள்ள நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  7 ஆயி ரத்தை தாண்டியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள், தில்லி அரசு ஊழியர்கள், நாட்டின் முக்கிய 6 வங்கி களின் இணையத்தளங் களில் ஊடுருவி வாடிக் கையாளர்களின் தக வல்கள், முக்கிய கோடீ ஸ்வரர்கள் என மொத்தம் 16.8 கோடிப் பேரின் தக வல்களைத் திருடியதாக 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தில்லி, புனே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பிரபல மென்பொருள் நிறுவனமான ஆக்சென்ச்சர் நிறுவனம்  உலகளவில் 19,000 ஊழி யர்களை பணிநீக்கம் செய் வதாக அறிவித்துள்ளது.