போபால், மே 21 - மத்தியப் பிரதேசத்தில் பட்டியல் வகுப்பு மணமக்களின் திருமண ஊர்வலத்தின் போது கற்களை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த, முஸ்லிம்கள் 6 பேரின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியது. மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜிராபூர் நகரில் மதன் மாளவியா என்பவரின் மகள் அஞ்சுவுக்கும், சுரேஷ் சவுகானின் மகன் லக்கிக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடந்துள் ளது. அதைத் தொடர்ந்து மணமக்கள் அன்றிரவு 11.30 மணியளவில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலம் மசூதி வழியே சென்றதாகவும், அப்போது, டிஜே மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாகவும், மேளம் கொட்டப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஆனால், இந்த திருமண ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த 20-25 பேர் வந்து தலித் மணமகன் தரப்பைச் சேர்ந்தவர்களையும், மேளம் வாசித்ததற்காக இசைக்குழு உறுப்பினர்க ளையும் கற்களை வீசித் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில், மணமகன் தரப்பில் இருந்து நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து வயது சிறுமி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, மேல் சிகிச்சைக்காக உஜ்ஜைனிக்கு அனுப்பப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சமர் லாலா, பர்ஹான் கான், ஜூனைத் கான், சோஹைல் கான், சபீர் கான், அனஸ் கசாய் மற்றும் டக்கா கான் ஆகிய 6 பேர் மீது ஜிராப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களைக் கைதும் செய்த னர். இதனிடையே, பட்டியல் வகுப்பு மண மக்கள் ஊர்வலத்தில் கற்களை வீசியதாக கூறப்பட்ட முஸ்லிம்கள் 6 பேரின் வீடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு கட்டடங்கள் என்பதால் வீடுகளை இடித்து அகற்றியதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.