states

வாகன சட்டத்திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராத கட்டண உயர்வை கைவிடுக!

சென்னை, அக்.27- வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமை யான அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த  கடுமையான அபராத கட்டண உயர்வை கை விட வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருத்தப்பட்ட வாகனச் சட்டம் நடை முறைக்கு வந்துள்ளதாகவும், அதைத்  தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்  கான அபராதமும் கடுமையாக உயர்த்தப் படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற் கொள்வது, அதிக வேகத்தில் பயணம், ஒரு வழிப்பாதையில் பயணம் உள்ளிட்ட அனைத்து விதமான விதிமீறல்களுக்கும் அபராதமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையை விட, திருத்தப்பட்ட வாகனச் சட்டத்தின் படி ஏற்க னவே இருந்த கட்டண விகிதத்தை விட தற்  போது 400 சதவிகிதம் முதல் 1900 சதவிகிதம் வரையில் அபராத தொகையானது அதி கரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஹெல் மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு 100 ரூபாயிலிருந்து 1000 ரூபா யும், காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்வோ ருக்கு 100 ரூபாயிலிருந்து ரூ.1000 ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பா னது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை யும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை யும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படு வதாக சொன்னாலும் கூட, இத்தகைய அப ராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது. மாறாக, போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங் களை விரிவான முறையில்  மேற்கொள்வதை உறுதி செய்வதோடு கூடுதலான தன்னார்வ லர்களை இப்பணிகளில் ஈடுபடுத்திட முன்  வர வேண்டுமெனவும், அதேபோல  தேவை யான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நட வடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலமே விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க முடியும் எனவும் சுட்டிக் காட்ட விரும்பு கிறோம். எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப் பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழு மையாக கைவிட வேண்டுமெனவும், போக்கு வரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சா ரங்களை கூடுதலாக்குவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.