states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சில்லரைப் பணவீக்கம் 7.41 சதவிகிதமாக உயர்வு!

அக்டோபர் 12ஆம் தேதி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவு களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 7.00 சதவிகிதமாக இருந்த சில்லரைப் பணவீக்கம் செப்டம்பர்  மாதத்தில் 7.41 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருள் பணவீக்கமும் ஆகஸ்ட் மாதத்தில்  7.62 சதவிகிதத்திலிருந்து செப்டம்பரில் 8.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் 

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ளார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11 லட்சத்து  27 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். போனஸ் வழங்குவதன் காரணமாக ரயில்வேக்கு ரூ. 1,732 கோடி செலவாகும் என அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

5ஜி சேவைக்கான உரிமத்தை பெற்றார் அதானி

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் கலந்துகொண்ட கவுதம் அதானியின் நிறுவனம், 26 ஜிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட அலைக்கற்றைகளை ரூ. 212 கோடிக்கு வாங்கியது. இந்நிலை யில், அதானி குழுமம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை துவங்குவதற்கான உரிமத்தை  ஒன்றிய அரசு தற்போது வழங்கியுள்ளது. 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையைப் பொதுச் சேவை யில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி, அமித்ஷாவுக்கு ஒன்றும் தெரியாது!

“நரேந்திரமோடி, அமித்ஷா பேசுவதற்கு பெரிய முக்கியத்துவத்தை கொடுக்க நான் விரும்ப வில்லை. அவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அரசியலுக்கு ஏதாவது வகையில் உதவி யிருக்கிறார்களா, என்ன? சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறாதவர்கள் எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அரசியல் இயக்கத்தைப் பற்றி பேசுகின்றனர். 2002-க்கு முன்பு நரேந்திர மோடியை யாருக்கு தெரியும்? அவசர காலத்தில் நான் சிறைக்கு சென்றிருக்கிறேன். மோடிக்கும், அமித் ஷாவுக்கும் எதுவும் தெரியாது” என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.

ஹோட்டல் உணவை தலித் வீட்டில் உண்ட பொம்மை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்குப் போட்டியாக, கர்நாடகத்தில் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் ராய்ச்சூர்  மாவட்டத்திலிருந்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, கமலாபூர் கிராமத்தில் ஹிரலா கொல்லப்பா என்ற தலித் நபரின் வீட்டில் பொம்மையும், எடி யூரப்பாவும் காலை உணவருந்தினர். இந்நிலையில், ஹோட்டல் உணவு, இலையில் சாப்பாடு, கேன்  தண்ணீர், காபி கப், எனக் குறிப்பிட்டு.. பாஜக தலைவர்களின் போலித்தனத்தை சமூகவலை தளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை

கடந்த 2013-ஆம் ஆண்டு முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் நடந்த  கொலைச் சம்பவத்தை சங்-பரிவாரங்கள் மதவன்முறையாக மாற்றின. இந்த வன்முறையில்  60 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு ஒன்றில் பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி உள்பட 26 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்நிலையில், பாஜக  எம்எல்ஏ விக்ரம் சைனி மற்றும் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், சைனிக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணியை தாக்கி கருவைக் கலைத்த பாஜக நிர்வாகி

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு அடுத்த ஜெனுகட்டே கிராமத்தை சேர்ந்த தேயிலை தோட்ட  தொழிலாளர்கள் சிலர், தோட்ட உரிமையாளரும், பாஜக நிர்வாகியுமான ஜகதீச கவுடாவிடம் ரூ.  9 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், ஜகதீச கவுடாவும் அவரது மகன் திலக் கவுடாவும், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த  தோட்ட தொழிலாளர்கள் 16 பேரை தங்களின் வீட்டின்  அறையில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் கர்ப்பணி பெண் ஒருவரின் கரு கலைந்துள்ளது. இந்நிலையில், ஜகதீச கவுடாவும் அவரது மகன் திலக் கவுடாவும் தலைமறை வாகி விட்டதாக கூறப்படுகிறது.

2023 டிசம்பரில் ராமர் கோயில் திறப்பு: மோடி தகவல்

மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹால்கல் லோக் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டு மானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படலாம். காசி விஸ்வநாதர் கோயில் நமது இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இது வரைக் காணாத ஓர் வளர்ச்சி சோம்நாத், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற சிவதலங்களில் நடை பெற்று வருகிறது. நாங்கள் (பாஜக அரசு) ஆன்மீகத்தலங்களின் பெருமைகளை மீட்டெடுக்கி றோம்” என்று பேசியுள்ளார்.'

நரபலி: 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

2 பெண்கள் நரபலி கொடுத்த விவகாரத்தில் கேரளா வைச் சேர்ந்த முகமது ஷபி, லைலா, பகவல் சிங் ஆகிய  3 பேருக்கு வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்  விதித்து உத்தரவிட்டது எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம். எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (வயது 50), தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட பகுதியை சேர்ந்த பத்மா (54) என்ற 2 லாட்டரி  வியாபாரிகள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டனர்.

மணீஷ் சிசோடியா சர்ச்சை பதிவு

புதுதில்லி, அக்.12- இமாச்சலப் பிரதேச சட்ட சபை தேர்தல் முடிந்த வுடன் பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரஸ் எம்எல்ஏக்  கள் பாஜகவில் சேர்ந்துவிடு வார்கள்; எனவே இமாச்சல் வாக்காளர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் எங்களது கட்சிக்கு வாக்களிக்க வேண்  டும்; காங்கிரசுக்கு போடும் வாக்குகள் பின்னர் பாஜக வுக்கே சென்றுவிடும் என்ப தால், வாக்காளர்கள் எச்ச ரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்” என ஆம்ஆத்மி மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

சென்னை, அக்.12- தமிழகம் முழுவதும் 163 அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  குறைந்த ஊதியத்தில் 15 ஆண்டுக ளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 5,583 கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிலைப்பு வழங்க வேண்டும். அரசாணை எண் 56-இன்படி  தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்க ளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நிலைப்பு வழங்க வேண்டும்; ஊதிய  உயர்வு வழங்க வேண்டும்; உதவிப் பேராசிரியர் கள் பணிக்கு தகுதி பெறுவ தற்காக மாநில தகுதித் தேர்வு நடத்தப் பட வேண்டும். போட்டித் தேர்வு நடத்தாமல், கல்வித்  தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நிலைப்பு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு நாட்களாக நுழைவாயில் முழக்கப் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

4 நாட்கள் பரவலாக கனமழை பெய்யும்

சென்னை,அக்.12- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக  மழையும், அநேக இடங்களில் கனமழை யும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி  மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அக்.13 முதல் 16 ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருது நகர், மதுரை, சிவகங்கை, ராமநாத புரம் புதுக்கோட்டை, கரூர், ஈரோடு,  நாமக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர், நாகை, திருவாவூர்,  மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிக ளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

பேரவைத் தலைவருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்

சென்னை,அக்.12- அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட பொதுக் குழுவில் ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களை ஈபிஎஸ் நீக்கினார். இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஓபிஎஸ் தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். ஈபிஎஸ் தரப்பினர்  ஓபிஎஸ்சை நீக்கி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமனம்  செய்தனர். இதற்கு ஈபிஎஸ் தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்கள்  அனைவரிடமும் கையெழுத்து பெற்று பேரவைத்தலைவர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தனர்.  வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடை பெறவுள்ள நிலையில் ஓபிஎஸ்சை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என  ஈபிஎஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து பேரவைத் தலைவரிடம், வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓபிஎஸ், பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தாம்  என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு  எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.