ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம் திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக் கல்லூரி மைதானத்தில் ‘திருவாதிரை’ என்ற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சூர் மாநகராட்சி குடும்பஸ்ரீ அமைப்பை சேர்ந்த 7 ஆயிரத்து 27 பெண்கள் நடனமாடி உலகசாதனை படைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி களாக பதவி வகித்து வரும் நீதிபதிகள் ஏ.ஏ. நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜி யம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு தகராறு செய்த “இந்து சேனா” என்ற அமைப்பைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய தேடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த சம்ப வத்தை தொடந்து, கோயம்பேடு துணை ஆணை யர் உமையாள் நேரடி விசாரணையை தொடங்கி யுள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்களை ஏலம் விடு வதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி களை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமங்க ளைக் கைப்பற்றியது மோடியின் நெருங்கிய கூட்டாளியும், உலகின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 (Viacom 18) நிறுவனம்.
வார இறுதி நாட்கள், முகூர்த்த நாட் களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.