மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் அமலாக்கத்துறை மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள- “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட்ட கனடே சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களம் கண்டார். செவ்வாயன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் கல்பனா சோரன் 1,09,827 பெற்று, 27,149 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் திலீப் குமாரை (பெற்ற வாக்குகள் - 82,678) வீழ்த்தினார். தனது கணவர் சிறைக்குச் சென்ற பின் “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்காக அதிரடி பிரச்சாரம் மேற்கொண்ட கல்பனா சோரனின் வெற்றியை ஜார்க்கண்ட் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.