states

img

ஜம்மு - காஷ்மீரை ஆப்கானிஸ்தானாக மாற்ற விரும்புகிறது மோடி அரசு!

மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

ஸ்ரீநகர், பிப். 7 - ஒன்றிய பாஜக அரசானது, ஜம்மு - காஷ்மீரை  ஆப்கானிஸ்தானாக மாற்ற விரும்புகிறது என்று மெகபூபா முப்தி குற்றச்சாட்டினார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  கடந்த சில வாரங்களாக, ‘ஆக்கிரமிப்பு அகற்று தல்’ என்ற பெயரில், நூற்றுக்கணக்கான கட்டடங் கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வரு கின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்பு, கடைகள் என வாழ்வா தாரத்தை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.  இந்த பின்னணியிலேயே, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி யின் தலைவருமான மெகபூபா முப்தி, ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டின் அரசியலமைப்பை புல்டோஸ் செய்வதற்கு பாஜக தனக்குள்ள மிருகத்தன மான பெரும்பான்மையையே ஆயுதமாக்கி இருக்கிறது. மாற்றுக் கருத்து மற்றும் நீதித்துறையின் குரலை நசுக்க ஊடகங்களையும் பாஜக ஆயுதமாக்கியுள்ளது. காஷ்மீருக்கு வருபவர்கள்,

இங்கு குவிக்கப்பட்டுள்ள புல்டோ சர்களை பார்க்கும்போது, ஆப்கானிஸ்தானில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். அவர்கள் (பாஜக) எங்கள் வேலைகள், நிலங்கள் மற்றும் கனிமங்களை அவுட்சோர்ஸ் செய்து விட்டனர். மோசடி செய்பவர்களுக்கு 45 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை என்ற பெயரில் காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.  பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் என்ன செய்கிறது என்பதில் இருந்து பாஜக ஒரு  முன்னுதாரணத்தை எடுத்ததாக நாங்கள் முன்பு  நினைத்தோம், ஆனால் இப்போது அவர்கள் அதை விட்டுவிட்டு, ஜம்மு - காஷ்மீரை ஆப்கா னிஸ்தான் போல மாற்ற விரும்புகிறார்கள் என்று  தெரிகிறது. நான் அதனை ஏன், பாலஸ்தீனத்து டன் ஒப்பிடுகிறேன் என்றால், காஷ்மீரில் பாஜக  அரசாங்கம் என்பது ஒரு கிழக்கிந்திய கம்பெனி போல. ஆனால், பாலஸ்தீன நிலவரம் காஷ்மீரை காட்டிலும் சிறப்பாக உள்ளது. அங்குள்ள வர்கள் பேச முடிகிறது. காஷ்மீரில் அதைவிட மோசமான நிலைமை உள்ளது. புல்டோசர் மூலம் மக்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன.  இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.