states

img

மோடி அரசு விதித்துள்ள வரிகளை திரும்பப் பெற்று விலை உயர்வை தடுக்க வேண்டும்: பிரகாஷ் காரத்

திருவனந்தபுரம், மே 30- கடும் விலைவாசி உயர்விலிருந்து விடுபட, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியை  மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க தேசிய பயிற்சி முகாமின் ஒரு பகுதி யாக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட த்தை அவர் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல்  மீதான வரிகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு விதித்துள்ள கூடுதல் கலால் வரி  மற்றும் செஸ் வரியை திரும்பப்பெற வேண்டும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு ள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறு வனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறது. எரிபொருள் வரியை மாநி லங்கள் குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. கேரளாவில் உள்ள இடது சாரி அரசு கடந்த 6 ஆண்டுகளாக எரிபொருள்  வரியை உயர்த்தவில்லை. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக  ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்து ராஷ்டிராவுக்கான முயற்சி

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சி  நிரலை அமல்படுத்தவும், இந்தியாவை முழு இந்து நாடாக மாற்றவும் ஆளும் பாஜக  அரசு திட்டமிட்ட முயற்சியில் ஈடுபட்டு வரு கிறது. வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்ற முடியாது என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுச் சட்டம் கூறுகிறது. ஆகஸ்ட் 15, 1947க்குப் பிறகு பாபர் மசூதியைத் தவிர  வேறு எந்த வழிபாட்டுத் தலங்களும் மாற்றப்படவில்லை. அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பில், 1991-ஆம் ஆண்டு சட்டம்  இப்போதும் உள்ளது என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. இருப்பினும், வாரணாசி யில் உள்ள ஞானவாபி மற்றும் மதுராவில் உள்ள ஈத்கா மீதான நீதிமன்ற வழக்குகள் இந்த சட்டத்திற்கு முரணானது. அந்த சட்டத்தை எதிர்த்து உ.பி.யில் உள்ள நீதிமன்றங்களில் மனுக்கள் ஏற்கப்பட்டன. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தி லும் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் உரிமை களுக்கு எதிரான வன்முறைகள் தலை விரித்தாடுகின்றன. சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ். லவ் ஜிஹாத், ஹிஜாப், ஹலால் இறைச்சி  மற்றும் மதமாற்றம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் அடை யாளங்கள் மற்றும் உரிமைகள் தாக்கப்படு கின்றன. இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.