states

img

குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அமைப்புகள் முடிவு

மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட பல்வேறு அமைப்புகள் தயாராகி வருகின்றன.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத்தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து பிபிசி நிறுவனம் மோடிக்கான கேள்விகள் என்கிற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற எந்த சமூக வலைத்தளத்திலும் இந்த ஆவணப்படத்துக்கான இணைப்புகளைப் பதிவிடக்கூடாது என்று ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

பிபிசி ஆவணப்படம் தொடர்பாக ஒன்றிய அரசு விதித்துள்ள தடையை உடனே நீக்க வேண்டும் என பல்வேறு முற்போக்கு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர்  பிபிசி ஆவணப்படத்தை திரையித் தயாராகி வருகின்றனர். இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பும் மோடியின் ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடுவோம் என்று அறிவித்து களமிறங்கியுள்ளன.

கேரளாவில் பிபிசி ஆவணப்படத்தை வெளியிட முயற்சிக்கும் செயல்பாடுகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.