states

img

நிபா வைரஸ் தொற்றுக்கு மாணவர் உயிரிழப்பு மலப்புரம் மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடு

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலை யில், மலப்புரம் மாவட்டம் திரு வாலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான கல்லூரி மாணவர் காய்ச்சல் அறிகுறிகளு டன் பெரிந்தல்மண்ணாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாணவர் உயி ரிழந்த நிலையில், கோழிக்கோடு மற்றும் புனேவில் (மகாராஷ்டிரா) உள்ள ஆய்வ கங்களில் ரத்தம், உமிழ்நீர் மாதிரியை பரி சோதித்ததில் உயிரிழந்த மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது. 

இதனால் மாணவரின் வீடு உள்ள திரு வாலி கிராம பஞ்சாயத்தின் 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளும், மம்பாடு கிராம பஞ் சாயத்தின் 7ஆவது வார்டும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருவாலி மட்டுமின்றி மலப்புரம் மாவட் டம் முழுவதும் முகக்கவசம் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. 

நிபா வைரஸ் பரவல் தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் மலப் புரம் மாவட்டத்திற்கு கூடுதல் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள் :

J பொதுமக்களின் ஒன்று கூடுதல் கூடாது.

Jவணிக நிறுவனங்கள் காலை 10 மணிமுதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் (பால், செய்தித்தாள் மற்றும் காய்கறிகள் காலை 6 மணி முதல்திறக்கலாம்). 

J இந்த கட்டுப்பாடு மருந்து கடைகளுக்கு பொருந்தாது.

J திரையரங்குகள் இயங்கக்கூடாது.

Jபள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டும்.

J காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் போது சுய மருத்துவம் செய்ய வேண்டாம், பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறவும்.

J பறவைகள், வௌவால்கள் அல்லது பிற உயிரினங்களால் கடித்த அல்லது பழ மரங்களில் இருந்து விழுந்த பழங்களை எந்த சூழ்நிலையிலும் சாப்பிடக்கூடாது. பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு
கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.