states

img

சட்டப் பேரவையில் புத்தக திருவிழா: புதிய வரலாறு படைத்தது கேரளம்

திருவனந்தபுரம், ஜன.16- கேரள சட்டப் பேரவையில் நடந்த சர்வ தேச புத்தக திருவிழா  புதிய வரலாறு படைத்தது. வாசிப்பு மற்றும் பண்பாட்டு விவா தங்களுக்கான தளமாக, திறந்த புத்தகங்கள் நிரம்பிய கேரள சட்டப்பேரவை கண்காட்சி, அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் கூடுவதாக சபதம் ஏற்று, வாசிப்புச் சமூகம் விடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக, உள்ளத்தில் தோன்றிய அனுபவங்களை எழுதிய வாச கர்களும், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்களும் சந்திக்கும் இட மாக கேரள சட்டப் பேரவை அமைந்தது. கேரளா சட்டப்பேரவை சர்வதேச புத்தகத் திருவிழாவிற்கு உள்நாட்டிலும் வெளியிலும் இருந்து 122 பதிப்பாளர்கள் வந்தனர். கண்கா ட்சியில் பல்வேறு இடங்களில் 77க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டு, 127 அரங்குகள் மூலம் வாசகர்களுக்கு புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டன. புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்த பொதுமக்கள் சட்டப்பேரவைக் கட்டிடம் மற்றும் அதன் செயல்பாடுகளை கண்டுகளித்தனர். சட்டப்பேரவையின் ஒவ்வொரு மூலையிலும் நுழைவாயிலிலும் இருந்து புகைப்படங்களுடன் திரும்பினர்.

புத்தகத் திருவிழாவைக் காணவும், சட்டப் பேரவையை பார்வையிடவும் 70 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்திருந்தனர். போக்குவரத்துத் துறை, தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை  ஆகியவை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதி யாக மாறின. பள்ளி மாணவர்கள் நகர சவாரி, அருங்காட்சியகம் மற்றும் விலங்கு கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை பெற்றனர். அரங்குகளில் தங்களுக்குப் பிடித்த புத்த கங்களைத் தேடி தேடி வாங்கினர். கடந்த சில நாட்களில் ஒவ்வொரு பதிப்பகத்திட மும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங் களை வாசகர்கள் வாங்கிச் சென்றனர். கண் காட்சியில் கோடிக்கணக்கிலான தொகைக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் கூறுகையில், கேரள சட்டமன்ற சர்வதேச புத்தக திருவிழா 2023 மறக்க முடியாத அனு பவமாக அமைந்தது என்றார். ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர் மற்றும் எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாக இருப்ப தால் புத்தகத் திருவிழாவை இவ்வளவு விரி வான முறையில் நடத்த முடிந்தது என்று  கூறினார். இந்த வெற்றிக்கு உழைத்த பல் வேறு துறை அலுவலர்கள் மற்றும்  பேரவையின் ஒட்டுமொத்த பணியாளர் களுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாம் பதிப்பிற்கு சபாநாயகர் அனைவரையும் வரவேற்பதாக கூறினார்.