திருவனந்தபுரம், ஜுன் 5- திரைப்பட இயக்குநரும், பாஜக மாநிலக் குழு உறுப்பினருமான ராஜசேனன் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்தார். பாஜக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தலைவர்களின் கடுமையான புறக்கணிப்பை எதிர்கொண்டதாகவும் ராஜசேனன் கூறினார். கலை மற்றும் சமூகத் துறையிலும் சிறப்பாகச் செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக தெரிவித்தார். ராஜசேனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தனை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். 2016இல் அருவிக்கரா தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜசேனன் போட்டியிட்டார்.
வி.ஜாய் எம்எல்ஏ வாழ்த்து
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்த இயக்குநர் ராஜ சேனனை அவரது வீட்டில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வனந்தபுரம் மாவட்டச் செயலாளர் வி.ஜாய் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.