states

குஜராத்தில் 61 லட்சம் வாக்குகளைக் கொண்ட மல்தாரி சமூகத்தினர் பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு!

அகமதாபாத், நவ. 24 - குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும்  பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேதான் பிரதான போட்டி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒப்பீட்டளவில் பாஜக வலுவாக இருப்ப தாக கூறப்பட்டாலும், அதிருப்தி தலைவர்களின் போட்டி அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடும் இந்த அதிருப்தி தலைவர்கள், குஜராத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், இந்த தொகுதி களின் தேர்தல் முடிவுகள் பாஜக-வை அச்சத்தில் வைத்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, குஜராத் மாநிலத்தின் முக்கியமான சாதிப்பிரிவுகளில் ஒன்றான மல்தாரி  சமுதாயத்தினர், இந்த முறை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மகா பஞ்சாயத்து மூலம் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, பாஜக-வின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. குஜராத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் படிதார் சமுதாயத்தை சேர்ந்த முதலமைச்சர் பூபேந்திர படேலையே இம்முறையும் முத லமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்து உள் ளது. அதேபோல் படிதார் சமுதாயத்தின் இளம்  தலைவரான ஹர்திக் படேலையும் காங்கிரசில் இருந்து பாஜக தன்பக்கம் இழுத்துப் போட்டுள்ளது. இதனால் கடந்த 2017 தேர்தலின்போது, படிதார்  சமுதாயத்திடம் இருந்து பாஜக-வுக்கு எழுந்த  எதிர்ப்பு இம்முறை இருக்காது என்று கூறப்படு கிறது. இதேபோல் காங்கிரசில் இருந்த பழங்குடி யினர் தலைவர்கள் சிலர் பாஜக-விற்கு தாவி யிருப்பதும் பாஜக-வுக்கு பலமாக பார்க்கப்படு கிறது. பட்டியல் வகுப்பினர், நகர்புறங்களில் வசிப்பவர்களின் வாக்குகள் தங்களுக்கு வரா விட்டாலும், அவற்றை காங்கிரஸ், ஆம் ஆத்மி  கட்சிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளும் என்பதால், அதனால் தங்களுக்குப் பெரிய பாதிப்பி ல்லை என்று பாஜக கணக்கு போட்டுள்ளது.

இந்நிலையில்தான், பாஜக-வுக்கு இந்த முறை ஆதரவு அளிக்கப்போவது இல்லை என்ற  மல்தாரி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எடுத்துள்ள  முடிவு, அந்தக் கட்சிக்கு இடியாக அமைந்துள்ளது. பாஜக-வின் கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் தாங்கள் அதிருப்தி அடைந்து இருப்ப தாக மல்தாரி மகா பஞ்சாயத்து தெரிவித்து உள்ளது.  கடந்த திங்கட்கிழமை மெஹ்சானாவில் கூடிய  மல்தாரி மகாபஞ்சாயத்தில் அதன் மாநில செய்தித் தொடர்பாளர் நாக்ஜிபாய் தேசாய் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குஜராத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகால பாஜக  ஆட்சியில் மல்தாரி சமுதாயத்தினர் மகிழ்ச்சியாக இல்லை. மல்தாரி மக்கள் ஒன்றுபட்டு இந்த ஜனநா யகத்தில் வாக்கிற்கு இருக்கும் பலத்தை காட்ட  வேண்டும். டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் நடை பெறும் குஜராத் தேர்தல் வாக்குப்பதிவில் மல்தாரி  சமுதாயத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது” என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “நமது சமுதாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெக்தீஷ் தாகோர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டு இருக்கிறோம். வாக்கு என்ற ஆயுதத்தை ஏந்தி, இந்த தேர்தலில் பாஜக-வுக்கு நமது சமுதாய மக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்” என்று தங்களின் காங்கிரஸ் ஆதரவு நிலைபாட்டையும் வெளியிட்டுள்ளார். மல்தாரி சமுதாயத்தினர் குஜராத் மாநில மக்கள் தொகையில் 8.5 சதவிகிதம் என்பதும், சுமார் 61 லட்சம் வாக்குகளை வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.