states

துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர் பலி - கர்நாடக வனத்துறைக்கு சிபிஎம் கண்டனம்!

கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்

சென்னை, பிப்.18- துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டு மீனவர் பலியான சம்பவம் குறித்து கர்நாடக வனத் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம், கொளத்தூர் தாலுகா, மேட்டூர், கோவிந்தபட்டியைச் சேர்ந்த ராஜா  என்ற காரவடையான் உள்ளிட்ட 7 பேர் கடந்த  14ஆம் தேதியன்று காவிரி ஆற்றில் மீன்  பிடிக்கச் சென்றனர். அப்போது, கர்நாடக  மாநில வனத்துறையினர் துப்பாக்கி சூடு  நடத்தியதில்   ராஜா என்ற காரவடையான் பலியாகியுள்ளார். கர்நாடக வனத்துறை யினரின் இந்த ஜனநாயக விரோத, சட்ட விரோத படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் காவிரி யுடன் இணையும் பாலாறு வனப்பகுதி உள்  ளது.

மலையோர தமிழக கிராமங்களிலி ருந்து செல்லும் மீனவர்கள் பாலாற்றை கடந்து சென்று இப்பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தபாடி, தருமபுரி  மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பரிசல்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டி ருந்த போது அங்கு வந்த கர்நாடக வனத்  துறையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். உயிருக்கு பயந்து அனைவரும் தப்பியோ டிய நிலையில் ராஜா என்ற காரவடையான் என்பவர் மீது குண்டு பாய்ந்து ஆற்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இதேபோன்று, 10  ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மீன்  பிடிக்கச் சென்றவர்களை கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியில் பழனி என்பவர் பலியாகியுள்ளார். கர்நாடக வனத்துறையினரின் படுகொலைகள் தொடர்வது வன்மையான கண்டனத்திற் குரியது.

எனவே, துப்பாக்கிச் சூடு நடத்திய கர்  நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமென வும், அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி படு கொலைகள் புரியும் கர்நாடக வனத்துறை யினரின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி டவும், உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கிடுவதற்கும் கர்நாடக அரசை தமிழ்நாடு அரசு உரிய முறையில் நிர்ப்பந்திக்க வேண்டுமென சிபிஐ (எம்)  தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்து கிறது. மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.5 லட்சம் நிவா ரணம் வழங்கியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான ராஜாவை இழந்து தவிக்கும் குடும்  பத்தினருக்கு இது ஆறுதல் அளிப்பதாக இருப்பினும், கூடுதலாக இழப்பீடும், அவ ரது குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்கிட  முதலமைச்சர்   முன்வர வேண்டு மெனவும் சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில  செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.