கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக-வை தோற்கடித்து காங்கிரஸ் பெரும்பான்மையை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 113 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெரும்பான்மை என்று இருந்த நிலையில், காங்கிரஸ் 131 தொகுதிகள் வெற்றி பெற்று பாஜக-வை தோற்கடித்தது. பாஜக 61 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.