states

img

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : சிபிஐ(எம்) வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல்

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல்  நடைபெற்று வருகிறது. கே.ஆர்.புரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கும் தோழர் எம்.நஞ்சே கவுடா  செவ்வாயன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்பு கே.ஆர்.புரத்தில் ஊர்வலமாக சென்று  பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஊர்வலம் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.