states

img

சித்தராமையா - டி.கே.சிவக்குமார் இடையே மோதலை உருவாக்க பாஜக சதி முயற்சி!

“மூடா” என்ற நிலம் தொடர் பான வழக்கை வைத்து அம லாக்கத்துறை மூலம் முதல் வர் சித்தராமையா வை கைது செய்து கர்நாடகாவில் காங்கி ரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக பல் வேறு சதியை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களு க்கு முன் பாஜக எம்எல்ஏ சனகவுடா பாட்டில்,”காங்கிரஸ் அரசை கவிழ்த்து, முதல்வர் ஆவதற்கு தலைவர் ஒருவர் 1,000 கோடி ரூபாய் வரை பேரம் பேசி னார். ஆனால் பேரம் பேசிய தலைவரின் பெயரை வெளியிட மாட்டேன். இருப்பி னும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக மேலிட தலைவர்கள் எம்எல் ஏக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அத னால் காங்கிரஸ் அரசு தானாகவே கவிழும்” என கட்டுக்கதைகளை அள்ளி விட்டார். சித்தராமையா - டி.கே.சிவக் குமார் இடையே மோதலை உருவாக்க வே  பாஜக எம்எல்ஏ சனகவுடா பாட்டில் பொய்களை அள்ளி வீசுகிறார் என குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ள நிலை யில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது பற்றி பாஜக எம்எல்ஏ தெரி வித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,”பாஜக எம்எல்ஏ பேசிய விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் கட்சி யின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள் ளேன். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான விவகாரத்தில் வருமான வரித்துறையும் விசாரணை நடத்த வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.