உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜலால்பூரில் அம்மாநில போலீசார் பெண்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜலால்பூரில், அம்பேத்கர் சிலை உடைப்பை எதிர்த்து பொதுமக்கள் ஞாயிறு அன்று போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த போலீசார், பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் லத்தியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.