states

img

உத்தரபிரதேச உர ஆலையில் வாயு கசிவு - 2 பேர் பலி 15 பேர் படுகாயம்

உத்தரபிரதேச மாநில உர ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவினால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் பூல்பூரில் உள்ள இந்திய உழவர் உர கூட்டுறவு ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மயக்கமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;