நொய்டாவில், பெண் மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகிக்கு சிறப்பு வரவேற்பு அளித்த அவலம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன், அப்பெண்ணை தாக்கியதற்காக, பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி குண்டர் சட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்த சூழலில், ஒரு பெண்ணிடம் தாகத முறையில் நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகிக்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு வரவேற்பு அளித்த அவலம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.