states

img

ஆந்திரா: தண்டவாளத்தை கடக்க முயன்ற 5பேர் ரயில் மோதி உயிரிழப்பு

ஆந்திராவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத் தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படுவா கிராமம் அருகே  நேற்றிரவு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, “கவுகாத்தி விரைவு வண்டியில் பயணித்த 5 பேர்,  சங்கிலியை பிடித்து இழுத்ததால் அந்த ரயில் பாதியில்  நிறுத்தப்பட்டது. உடனே 5 பயணிகளும் ரயிலில் இருந்து கீழே குதித்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டது.