states

img

கவுகாத்தி ஐஐடியில் மாணவர் மர்ம மரணம் பாஜக அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கவுகாத்தி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் மிகப்பெ ரிய நகரங்களில் ஒன்றான கவுகாத்தியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ஐஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறு வனங்களில் ஒன்றான இங்கு அசாம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவ - மாணவி கள் படித்து வரும் நிலையில், திங்க ளன்று 3ஆம் ஆண்டு கணினி அறி வியல் படித்து வரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் தனது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவ னின் உடலை மீட்டு உடற் கூறாய்வுக் காக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மாணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கவுகாத்தி ஐஐடி யில் மாணவர்கள் அடிக்கடி உயிரை  மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவ தாக குற்றம் சாட்டியும், தற்போது நிகழ்ந்துள்ள மாணவரின் மரணத்தி ற்கு நீதி கேட்டும், மாநில பாஜக அரசின் பாதுகாப்பு கட்டமைப்பை கண்டித்தும் திங்கள்கிழமை இரவு முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, 24  வயதான எம்டெக் மாணவியும் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார். இதுவரை கடந்த 8 மாதங்களில் மட்டும் ஐஐடி கவு காத்தியில் 4 மாணவர்கள் இறந்துள் ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.