science

img

ஜூன் 1 -ல் தென்மேற்கு பருவமழை

சென்னை, ஏப்.17- நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வரும்  ஜூன் 1ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம்  தேதியுடன் முடிவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு இயல்பை விட 4 விழுக்காடு அளவுக்கு மழை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்க வாய்ப்பி ருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இயல்பான மழை அளவான 88 செ.மீ மழை  கிடைக்க 41 விழுக்காடு வாய்ப்பிருப்பதா கவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் கூடுதலாக மழை கிடைக்க 21 விழுக்காடு வாய்ப்புள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

;