science

img

பெண்கள் பாதுகாப்பிற்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஷூவை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்

பெண்களின் பாதுகாப்பிற்காக ”சாண்டல் ட்ரோன்”  என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஷூவை மொராதாபாத்தின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ட்ரோன் பாதுகாப்பு அமைப்புடன் கூடிய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வைத்து, அதன் மூலம் அபாய ஒளி எழுப்பும் விதத்தில், பெண்கள் அணியும் ஷூ என்றை உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு வந்தால் நிச்சயம் அனைத்து பெண்களும் இரவில் கூட தனியாக பாதுகாப்புடன் செல்வதுபோல் உணருவார்கள் என இதனை உருவாக்கிய மாணவர்கள் கூறுகின்றனர். 

இந்த ஷூவை தயாரித்த மாணவர்களுள் ஒருவரான திவாகர் ஷர்மா கூறுகையில், ”இந்தியாவில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே நாங்கள் ஷூ மற்றும் ட்ரோன் பயன்படுத்தி இந்த புதிய முயற்சியை கையாண்டோம். இந்த ஷூவின் உள்ளே சிறிய பட்டன் ஒன்று பொருத்தப்பட்டு உள்ளது.  பெண்களை யாரேனும் தாக்க வரும்போது, அந்த பட்டனை அழுத்தினால், அது ஷாக் அதிர்வை ஏற்படுத்தும். இதை கொண்டு தாக்க வருபவரை தாக்க முடியும். மேலும், அபாய ஒளியும் எழுப்பும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ஜிபிஎஸ் மூலம் அந்த பெண் எந்த பகுதியில் இருக்கிறாரோ, அந்த லொகேஷன் அவரது வீட்டாருக்கும், போலீசாருக்கும் சிக்னலையும் அனுப்பும்.  ஒருமுறை இந்த சிக்னல் அனுப்பப்பட்டுவிட்டால், அந்த பெண் இருக்கும் இடத்திற்கு ஜிபிஎஸ் மூலம் ட்ரோன் பறக்க ஆரம்பித்துவிடும். மேலும், ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் நடந்த அனைத்தையும் வீடியோவாக எடுத்துவிடும். இதன் மூலம் போலீசார் அப்பெண்ணை தாக்க முயன்றவரை எளிதில் அடையாளம் காண முடியும் என்று தெரிவித்தனர்.
 

;