science

img

கிரகணத்தில் மாயமில்லை; மந்திரமில்லை

2022  நவம்பர் 8 செவ்வாயன்று முழு சந்திர கிரகணம் ஏற்பட் டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின் போது என்ன  நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கிரகணத்தின் போது கட்டாயம் செய்ய வேண்டும் என சோதிடர்களும் காணொலி ஊடகங்களும் பலமாக கூவிக்கூவி பல விஷ யங்களை நம் மூளைக்குள் செலுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். கட்டா யம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்  கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் படித்த மக்களும், சோதிடர் சொல்  வதைக் கேட்டுக்கொண்டு, கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்  தில் வெளியே விட மாட்டார்கள்; கிரகணத் தின்போது உணவு பாஷாணம்/விஷம் ஆகி விடுமாம். அப்போது ஏதோ ஒரு கதிர் வந்து உணவை விஷம் ஆக்கி விடுகிறதாம். முக்கி யமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிராமத்தில் இருக்கும் சின்ன கோவில்கள் இந்த கணக்கில் வரு வதில்லை.பிராமணப் பூசாரிகள் இருக்கும் கோவில்களில்தான் இந்த நிலை. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடு கின்றனர். மக்கள் தலை முழுகிக் குளித்த  பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்  கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு,  உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு இல்லை. அவர்கள் அதைப்பற்றிக் கவலைப் படுவதும் இல்லை.

2022ஆம் ஆண்டில் கிரகணங்கள் 

2022 நவம்பர் 8 நிகழ்ந்துள்ள கிரகணம் முழு சந்திர கிரகணம் ஆகும். இது  இந்த  ஆண்டின் கடைசி கிரகணம் ஆகும். 2022ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள். இதில்  2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம். பொது வாக ஓர் ஆண்டில் 2-7 கிரகணங்கள் நிகழலாம்.  பொதுவாக, ஒரு வருடத்தில் 2-7 கிர கணங்கள் ஏற்படலாம். இதில் 2-5  சூரிய கிர கணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகண மும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிர கணங்கள் தான் வரும். முழு சூரிய கிரகணத்தின்போது அதன்  மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்  டுமே. எப்போதும் பூமியின் வட, தென் துரு வங்களில், பகுதி சூரிய கிரகணம் மட்டுமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிர கணம் நிகழும்போதுதான் முழு சூரிய கிர கணம் அல்லது முழு /சந்திர கிரகணம் உண்டா கிறது.முழு சந்திரகிரகணத்தின் நீண்ட நேரம் என்பது 106 நிமிடம் 1.42 நொடிகளாக இருந்  துள்ளது.

மேலும் சந்திர கிரகணம் 6 மணி நேரம் கூட நீடிக்கும்.   நவம்பர் 8 செவ்வாய் அன்று  நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை தமிழக மக்கள் முழு கிரகணமாக  பார்க்க முடியவில்லை. ஏனெ னில் சந்திரன் உதிக்கும்போதே கிரகணத்து டன்தான் உதித்தது. வடகிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் முழு சந்திர கிரகணத்தைப் பார்த்தனர். இதனை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளைத் தவிர, ஆசியா, வடக்கு மற்றும்  தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு  அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங் கடல் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள பகுதி களில் வசிக்கும் மக்கள் கண்டனர். இந்தியா வை பொறுத்தவரை தில்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, கவுகாத்தி உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் மட்டுமே முழு சந்திர கிரகணத்தைக் கண்டனர் . இது போன்ற நிகழ்வு அடுத்த 3 ஆண்டு களுக்கு பிறகு தான் நடக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது. அடுத்த முழு சந்திர கிர கணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும். இருப்பி னும் அக்டோபர் 2023 இல் நிகழும் சந்திர கிர கணத்தின் சிறிய பகுதியை இந்தியாவில் காண முடியும்.

கிரகணம் என்றால் என்ன? 

இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல  பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்  றன. அவை நகர்ந்து செல்லும்போது,சில சம யம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது எந்த வான் பொருள் குறுக்கீட்டால் மறைபடுகிறதோ அது நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிக ழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று  சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்  கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்  திர கிரகணம், முழு நிலா நாளிலும் நிகழும். பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்  ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக  சுற்றுகிறது. சந்திரனும் கூட,5 பாகை சரி வாக பூமியைச் சுற்றுகிறது.  இந்த காலகதி யில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன், இவை  மூன்றும் எப்போதாவதுதான் , ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதா வது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப் படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்  லப்படுகிறது.

பூமியின் நிழலுக்குள் சந்திரன் மறை யும்போது முழுமையாக கருப்பாக இருக் காது. நிலாவுக்கு எப்போதும் தன் ஒளி கிடை யாது. அதுசூரியனிடமிருந்து பெற்ற ஒளியை இரவில்,  புவியின் மேல் பாய்ச்சுகிறது. சந்திர  கிரகணத்தின் போது,  பூமி நிலவை மறைப்ப தால், அப்போது சூரியனின் கதிர்கள், பூமி யின் மேலுள்ள வளிமண்டலத்தின் மூலம், மறைமுகமாக நிலாவை தெரியவைக்கும். அப்போது நிலா, சிவப்பாக தெரியும். முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன்  சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பா கத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரி வது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின்  போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்  போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன.

அறிவியல் உண்மைகள் 

இந்த கிரகணங்களின் போது, சோதி டர்கள் சொல்வது போல,  எந்தவித சிறப்பு/ மர்ம கதிர்கள் சந்திரன் அல்லது சூரியனிட மிருந்து வருவது இல்லை என்பது அறிவி யல் பூர்வமான உண்மை. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் சூரியனை மறைக்கி றது. இதனை நாம் பூமியிலிருந்து பார்க்கி றோம். சந்திர கிரகணத்தின் போது பூமியின்  நிழல் சந்திரனை மறைக்கிறது. இதில் எந்த மாயமோ மந்திரமோ, உடலுக்கு தீங்கு விளை விக்கும் கதிர்களோ உருவாவது இல்லை.  மாறாக, சோதிடர்கள் சந்திரனை குறிப்பிட்  டுச் சொல்லும் மேஷ ராசியின் விண்மீன்கள் எனப்படும் அசுவினி, பரணி, கிருத்திகை அமைந்துள்ள இடம் பூமியிலிருந்து எவ்வ ளவு தூரம் தெரியுமா ? சுமார் 100 மில்லி யன்  ஒளியாண்டுகள் தொலைவு.(ஓர் ஒளி யாண்டு என்பது 9.6  டிரில்லியன் கி.மீ தூரம்). இந்த விண்மீன்களுக்கும்  பூமியிலிருந்து சுமார் 384,400 கி.மீ தொலைவில்மட்டுமே உள்ள சந்திரனுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? அவை வந்து இதனை என்ன செய்  யும்? இப்போது அந்த விண்மீன்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் கூட சோதிடர்களுக்குத் தெரியவே வாய்ப்பு இல்லை.

அது போலவே பூரம் எனும் விண்மீன்  சிம்ம ராசியில் உள்ளது எனச் சொல்வார்கள். இது பூமியில்இருந்து  22,336 ஒளியாண்டு கள் தொலைவில் உள்ளது.பூராடம் தனுசு விண்மீன் தொகுதியில் உள்ளது. இதுவும் 25,640 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. அதே போல் ராகு என்ற கோள் எதுவும்  சூரிய  குடும்பத்தில் கிடையாது. இது ஒரு கற்ப னைக் கோள். இதனையும் துணைக்கு இழுக்  கிறார்கள் சோதிடர்கள், பாவம்!

- பேரா.சோ.மோகனா