politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மேற்கு வங்கத்தில் டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் மே 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது, மிகப்பெரிய அளவில் தேர்தல் மோசடிகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக அத்தொகுதியில் போட்டியிட்ட எமது கட்சியின் வேட்பாளர் டாக்டர் ஃபாட் ஹலீம் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அங்கு நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்யும்போது அத்தொகுதியில் அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் தொகுதி முழுமைக்கும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்பது நன்கு புலப்படுகிறது. 


மேற்கு வங்கத்தில் பாஜக மாநிலத் தலைமைக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே தொகுதிகள் சிலவற்றில் போட்டிபோடுவதை விட்டுக்கொடுத்திடுவது தொடர்பாக ஒரு புரிதல் (understanding) ஏற்பட்டிருப்பது தெளிவாகியிருக்கிறது. அதாவது மதுராபூர், ஜாதவ்பூர் போன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக டைமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை பாஜக ஆதரிக்க வேண்டும் என்றும் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பிaல் போட்டியிடுபவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் என்பதுதான். இத்தொகுதியில் நடைபெற்றுள்ள மிக மோசமான ஒழுங்கீனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மே 19 அங்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்திட வேண்டும். அத்தொகுதிக்கு முழுமையாக மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டும்.


;