politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்:- அமைதி, நல்லிணக்கம், உண்மை, அகிம்சை ஆகியவைதான் மனித சமுதாயம் வளர உதவும் என்று காந்தி உறுதியாக நம்பினார்.
ச.சா - அப்படிப்பட்டவர கோட்சே சுட்டது தப்புதான..!!??
 

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் :-  பயங்கரவாதத்தைக் கொள்கையாக வைத்துள்ள நாட்டுடன் பேச்சு நடத்த முடியுமா?
ச.சா - அமெரிக்காவோட பேசலாமா..??
 

நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த்:- வேளாண் பொருளாதார வல்லுநர்களின் கருத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது.
ச.சா - பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ்னு ஒரு பட்டியல் வெச்சுருக்கீங்களே.. அவங்கதான் வல்லுநர்களா..?

செய்தி :- நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
ச.சா - பயிற்சி மையங்கள்ல கோடிக்கணக்குல, ஆள்மாறாட்டத்துல பல கோடிகள்னு நீட் தேர்வுப் பெயர்ல பெரும் கொள்ளை நடந்துருக்குதே..??

;