politics

img

கண்முன்பே உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பார்ப்பது பாவம்.... ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்வோம்... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறைகூவல்....

புதுதில்லி:
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாகவும், சமீப காலமாக அதற்கு ஏற்பட்டுள்ள சேதம் சரி செய்யப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி எழுதியுள்ள கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:மகாத்மா காந்தியின் தார்மீக தலைமை மற்றும் உண்மை, அகிம்சை, வகுப்புவாத நல்லிணக் கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பும்; ஜனநாயகம், பொதுத்துறை நிறுவனங் கள், பொருளாதார கட்டமைப்பு கொண்ட இந்தியாவை கட்டியெழுப்ப ஜவஹர்லால் நேருவின் அயராத முயற்சியும் உலக அரங்கில்இந்தியாவுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்தன. 560க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு தேசிய- அரசை உருவாக்குவதற்கு சர்தார் பட்டேல் உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டார். சுபாஷ் சந்திர போஸ் இராணுவ வலிமைக்கான முக்கியத்துவத்தை உணர்த்தினார். பாபாசாகேப் அம்பேத்கர் நமது அரசியலமைப்பை உருவாக்கி, நீதி, சுதந்திரம் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் விடுதலையை உறுதி செய்தார். இவ்வாறு முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக, ஆழமானவேர்களைக் கொண்ட துடிப்பானஜனநாயகத்தை நாம் வளர்த்திருக்கிறோம். 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய ஆண்டுகளில் நமது நாட்டின் முன்னேற்றம் பல முனைகளில்தலைகீழாக மாறியுள்ளது. சமீபத் தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்ற செயல்முறைகள் மற்றும்ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு உள்ள வெறுப்பை வெளிப் படுத்தியது. எதிர்க்கட்சிகளுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அழிவுக்கான வேளாண் பண் ணைச் சட்டங்கள்; இராணுவத் தரமான உளவு மென்பொருளைப் பயன்படுத்தி அரசியலமைப்பு பிரமுகர்கள், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்; உச்சத்திற்குப் போன பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து,நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற குழுக்களின் ஆய்வுக்கு அனுப்புவதற்குக் கூட அரசு தயாராக இல்லை. நாடாளுமன்றமே ரப்பர் ஸ்டாம்பாக மாற்றப்பட்டுள்ளது.மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் மக்களின் ஆணையை மதிக்காமல் கவிழ்க்கப்பட்டுள்ளன.

ஊடகங்கள் பகிரங்கமாக மிரட்டப்பட்டு, அவை உண்மையைப் பேசுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம், நீதி மற்றும் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்ட அமைப்புக்கள் சீரழிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.சுதந்திரம் பெற்றதிலிருந்து, கூட் டாட்சி என்பது நமது ஜனநாயக குடியரசின் வரையறுக்கும் அம்சமாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், பகிரப்படாத வரிகளால் ஒட்டுமொத்த வருவாயில் மாநிலங்கள் தங்களுக்கு உரிய பங்கை இழந்திருக்கின்றன. இது நமது கூட்டாட்சி கட்டமைப்பை துளைத்து, பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுக்கிறது.மற்றொரு சமீபத்திய ஆபத்தானபோக்கு சட்டங்கள் மற்றும் அரசுநிறுவனங்களை தவறாக பயன்படுத்துவது ஆகும். பிரிட்டிஷாரால் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் குறிப்பாக பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்ட சட்டங்கள், பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் கேள்வி கேட்கத் துணிந்தவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. முன்மொழியப்பட்ட வீடியோக்கள், ஆதாரங்கள் மற்றும் போலி டூல்கிட்கள் அனைத்தும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான, மிரட்டல் மற்றும் தவறான தகவல்களின் ஆயுதங்களாக மாறி வருகின்றன. இத்தகைய நகர்வுகள் பயத்தை ஏற்படுத்துவதையும், ஜனநாயக சுதந்திரத்தின் அடித்தளத்தையே வெட்டி எறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. நமது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. நாடாளுமன்ற கட்டடம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது.நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கித் தந்துள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு காலில் போட்டு மிதிக்கப்படும் போது, நாம்அமைதியாக இருப்பது மிகப் பெரியபாவம் ஆகும். நமது ஜனநாயகத் திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்யவேண்டும்.

குறுகிய மதவெறி, உலகக் கண்ணோட்டம் மற்றும் பாரபட்சம் மற்றும் பாகுபாடு ஆகிய சிந்தனைகளால் நிரம்பியவர்களை எதிர்கொள்ள நமது தியாகிகளிடமிருந்து நாம் தைரியம் பெற வேண்டும். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்யாதவர்களிடம் நாம் வீழ்ந்துவிடக் கூடாது.அவர்கள் காந்தியடிகளின் கண்ணாடிகளை கடன் வாங்கலாம் ஆனால் நம் நாட்டிற்கான அவர் களின் பார்வை கோட்சேயின் பார்வை. நமது நாட்டின் நிறுவனர்கள் 74 ஆண்டுகளுக்கு முன்புஅந்த பிரித்தாளும் சித்தாந்தத்தை நிராகரித்தனர், நாம் அதை மீண்டும் மறுக்க வேண்டும். எண்ணற்ற மொழிகள், மதங் கள், கலாச்சாரங்கள் மற்றும் இனங்களைக் கொண்ட ஒரு நாடு எவ்வாறுபன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது என்பதை இந்தியா தொடர்ந்துஉலகிற்கு நிரூபிக்க வேண்டும். நமது ஜனநாயகம் பழுது பார்க்கப் பட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் சரி செய்யப்பட வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

;