politics

img

விளம்பரப்பிரியர் எடப்பாடி; பாஜக நச்சுச் செடி....

“இவ்வளவு காலம் சும்மா இருந்து விட்டு கடந்த மூன்று மாத காலமாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சேலம் மாவட்டத்திற்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சென்று வந்து களைத்துப்போய் உள்ளார். அவரை பண்ணைக்கு சென்று ஓய்வு எடுங்கள் என்று  இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் சொல்லவேண்டும். இந்த அரசுக்கு மாற்றாக புதிய அரசு வரவேண்டு மென்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். 

பாஜக ஆட்சி அமைப்போம் என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். எந்த தொகுதி யிலும் தாமரை மலராது. இந்த நச்சுச் செடி இந்த மண்ணில் முளைக்காது.   “உழவரே முதல்வர் முதல்வரே உழவர்” என்று முண்டாசு கட்டிக்கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் திட்டங்களை துவக்கி வைக்க பிரதமரையும் அமித்ஷாவையும் அழைக்கச்சென்ற அவர், முண்டாசு கட்டிக்கொண்டு நள்ளிரவிலாவது  விவசாயிகளைச் சந்தித்திருக்கலாமே?

சிவகங்கை மாவட்டம் கல்லலில் நடைபெற்ற பூத் கமிட்டிக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பேசியது:-
 

;