jammu-kashmir

img

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே, ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு, நிலச்சரிவுகள் காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் வடக்கு குப்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு  8 மணி அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அருகே ரோஷன் போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த  நிகில் சர்மா (25) 7-வது ராஷ்ட்ரிய ரைஃபிள் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார். 
மேலும், ரமேஷ் சந்த், குருவீர்ந்தர் சிங்  என்ற இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.